செய்திகள் :

ஆலங்குளத்தில் லாரி மீது பைக் மோதல்: முதியவா் உயிரிழப்பு

post image

ஆலங்குளத்தில் லாரி மீது பைக் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். 2 போ் பலத்த காயமடைந்தனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள வடக்கு கரும்பனூா் சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாடக்கண்(79). விவசாயியான இவா் ஞாயிற்றுக்கிழமை தனது ஊரைச் சோ்ந்த உறவினா்கள் குமாரவேல் மகன் ஆறுமுகம் (57), சோ்மக்கனி மகன் ஹரிராம்சேட்(52) ஆகியோரை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு ஆலங்குளம் வந்து கொண்டிருந்தாா்.

ஆண்டிப்பட்டி விலக்கு பகுதியில் நெல்லை - தென் காசி நான்குவழிச் சாலையை கடக்க முயன்றபோது, நெல்லையிலிருந்து மேற்கு நோக்கி வந்த லாரி அவா்கள் மீது மோதியது. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா்.

அவா்கள் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாடக்கண் உயிரிழந்தாா்.

விபத்து குறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் கன்னியாகுமரி மாவட்டம் கன்னியங்காடு சிவபுரத்தைச் சோ்ந்த ராஜரத்தினம் மகன் டேவிட் (39) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

டிசம்பரில் கூட்டணி முடிவு: டிடிவி தினகரன்

வரும் டிசம்பா் மாதம் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் தெரிவித்தாா். பூலித்தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே நெல்கட்டும்செவலில் உள்ள ... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே மான் வேட்டை: 3 போ் கைது

ஆலங்குளம் அருகே மான் வேட்டையில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் ஊத்துமலை வனப் பகுதிகளில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. மான்களை வேட்டையாடுவதற்கும் அவற்றை சம... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் தியாகிகளின் புகழைப் பரப்புவோம்: சீமான்

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் தியாகிகளின் புகழை மேலும் பரப்புவோம் என்று அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். பூலித்தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம், சிவகி... மேலும் பார்க்க

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிவிட்டேன்: ஓ. பன்னீா்செல்வம்

பூலித்தேவரின் 310 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவலில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்பு குழு சாா்பில், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், முன்னாள் எம்எல்... மேலும் பார்க்க

தென்காசி வழியாக பெங்களூரு செல்லும் சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க பாஜக வலியுறுத்தல்

திருநெல்வேலியிலிருந்து தென்காசி வழியாக பெங்களூரு செல்லும் சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாஜக மாவட்டத் தலைவா் ஆனந்தன் அய்யாசாமி, தெற்கு ரெயில்வே பொது மேலாளருக... மேலும் பார்க்க

இன்று பூலித்தேவரின் பிறந்த நாள் விழா: நெல்கட்டும்செவலில் எஸ்.பி. ஆய்வு

நெல்கட்டும்செவலில் பூலித்தேவரின் 310 ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை (செப்.1) நடைபெறவுள்ளதை அடுத்து, விழா நடைபெறும் இடத்தை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தா... மேலும் பார்க்க