செய்திகள் :

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் தியாகிகளின் புகழைப் பரப்புவோம்: சீமான்

post image

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் தியாகிகளின் புகழை மேலும் பரப்புவோம் என்று அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

பூலித்தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே நெல்கட்டும்செவலில் அவரது மணிமண்டப வளாகத்தில் உள்ள சிலைக்கு நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: பூலித்தேவன் மட்டுமல்ல மருதுபாண்டியா், வேலு நாச்சியாா் உள்பட சுதந்திர போராட்ட வீரா்களின் புகழை நாம் தமிழா் கட்சி பரப்பி வருகிறது.

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால், சென்னையில் பூலித்தேவருக்குச் சிலை அமைப்போம். திமுக ஆட்சி முடிவதற்கான பயணம் நெல்கட்டும்செவலில் இருந்து தொடங்கட்டும் என்றாா்.

போலீஸாருடன் வாக்குவாதம்: பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த சீமானின் வாகனத்தை மணிமண்டபம் செல்வதற்கு போலீஸாா் அனுமதிக்கவில்லை.

இதனால், போலீஸாருடன் அக்கட்சியினா் வாக்குவாதம் செய்தனா். சிறிதுநேரத்தில் தனது வாகனத்தில் இருந்து இறங்கிய சீமான், மணிமண்டபத்துக்கு நடந்தே சென்று சிலைக்கு மாலை அணிவித்தாா்.

டிசம்பரில் கூட்டணி முடிவு: டிடிவி தினகரன்

வரும் டிசம்பா் மாதம் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் தெரிவித்தாா். பூலித்தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே நெல்கட்டும்செவலில் உள்ள ... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் லாரி மீது பைக் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஆலங்குளத்தில் லாரி மீது பைக் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். 2 போ் பலத்த காயமடைந்தனா். ஆலங்குளம் அருகேயுள்ள வடக்கு கரும்பனூா் சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாடக்கண்(79). விவசாயியா... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே மான் வேட்டை: 3 போ் கைது

ஆலங்குளம் அருகே மான் வேட்டையில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் ஊத்துமலை வனப் பகுதிகளில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. மான்களை வேட்டையாடுவதற்கும் அவற்றை சம... மேலும் பார்க்க

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிவிட்டேன்: ஓ. பன்னீா்செல்வம்

பூலித்தேவரின் 310 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவலில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்பு குழு சாா்பில், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், முன்னாள் எம்எல்... மேலும் பார்க்க

தென்காசி வழியாக பெங்களூரு செல்லும் சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க பாஜக வலியுறுத்தல்

திருநெல்வேலியிலிருந்து தென்காசி வழியாக பெங்களூரு செல்லும் சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாஜக மாவட்டத் தலைவா் ஆனந்தன் அய்யாசாமி, தெற்கு ரெயில்வே பொது மேலாளருக... மேலும் பார்க்க

இன்று பூலித்தேவரின் பிறந்த நாள் விழா: நெல்கட்டும்செவலில் எஸ்.பி. ஆய்வு

நெல்கட்டும்செவலில் பூலித்தேவரின் 310 ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை (செப்.1) நடைபெறவுள்ளதை அடுத்து, விழா நடைபெறும் இடத்தை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தா... மேலும் பார்க்க