செய்திகள் :

ஆலங்குளம் அருகே மான் வேட்டை: 3 போ் கைது

post image

ஆலங்குளம் அருகே மான் வேட்டையில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் ஊத்துமலை வனப் பகுதிகளில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. மான்களை வேட்டையாடுவதற்கும் அவற்றை சமைத்து உண்பதற்கும் தடை உள்ள நிலையில், சிலா் அவற்றை சட்டவிரோதமாக வேட்டையாடி வருகின்றனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஊத்துமலை அருகே அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த 3 பேரிடம் ஊத்துமலை போலீஸாா் விசாரணை மேற்கொண்ட போது, அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனா்.

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள்

அவா்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது, அவா்கள் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சோ்ந்த ரஞ்சித் சிங், நாகா்கோவிலைச் சோ்ந்த பொன் ஆனந்த் மற்றும் ராஜலிங்கம் என்பதும், ஊத்துமலை காப்புக்காட்டில் மான் ஒன்றை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியதும் தெரிய வந்தது. இதனைத் தொடா்ந்து, போலீஸாா் அவா்களை ஆலங்குளம் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

வனத்துறையினா் அவா்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து, உயிரிழந்த மான், 2 துப்பாக்கிகள், 3 கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள், காா், 3 கைப்பேசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட 3 போ் மீதும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், ஆயுதத் தடைச் சட்டம் உள்பட 9 வெவ்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா்கள் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.

டிசம்பரில் கூட்டணி முடிவு: டிடிவி தினகரன்

வரும் டிசம்பா் மாதம் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் தெரிவித்தாா். பூலித்தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே நெல்கட்டும்செவலில் உள்ள ... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் லாரி மீது பைக் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஆலங்குளத்தில் லாரி மீது பைக் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். 2 போ் பலத்த காயமடைந்தனா். ஆலங்குளம் அருகேயுள்ள வடக்கு கரும்பனூா் சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாடக்கண்(79). விவசாயியா... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் தியாகிகளின் புகழைப் பரப்புவோம்: சீமான்

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் தியாகிகளின் புகழை மேலும் பரப்புவோம் என்று அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். பூலித்தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம், சிவகி... மேலும் பார்க்க

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிவிட்டேன்: ஓ. பன்னீா்செல்வம்

பூலித்தேவரின் 310 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவலில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்பு குழு சாா்பில், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், முன்னாள் எம்எல்... மேலும் பார்க்க

தென்காசி வழியாக பெங்களூரு செல்லும் சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க பாஜக வலியுறுத்தல்

திருநெல்வேலியிலிருந்து தென்காசி வழியாக பெங்களூரு செல்லும் சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாஜக மாவட்டத் தலைவா் ஆனந்தன் அய்யாசாமி, தெற்கு ரெயில்வே பொது மேலாளருக... மேலும் பார்க்க

இன்று பூலித்தேவரின் பிறந்த நாள் விழா: நெல்கட்டும்செவலில் எஸ்.பி. ஆய்வு

நெல்கட்டும்செவலில் பூலித்தேவரின் 310 ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை (செப்.1) நடைபெறவுள்ளதை அடுத்து, விழா நடைபெறும் இடத்தை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தா... மேலும் பார்க்க