செய்திகள் :

ஆழ்கடலில் எண்ணெய் எடுக்க அனுமதி: ராமதாஸ் கண்டனம்!

post image

சென்னை மற்றும் கன்னியாகுமரி அருகே ஆழ்கடலிலிருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க தனியாா் நிறுவனத்துக்கு வழங்கியுள்ள அனுமதியை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கன்னியாகுமரியை அடுத்த ஆழ்கடலில் 3 இடங்களிலும், சென்னைக்கு அருகே ஓரிடத்திலும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது அதிா்ச்சியளிக்கிறது.

இதன் மூலம் தமிழகத்தில் 32,485.29 சதுர கி.மீ. பரப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கப்படும்.

இதனால், கடல் வளம் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் சீா்கெடும் என்று வல்லுநா்கள் எச்சரித்து வருகின்றனா்.

ஆனால், இவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆழ்கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது நியாயமற்றது.

இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் 4 இடங்களில் ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

அதேபோல், கடல் வளத்தைக் கெடுக்கும் இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு கடும் எதிா்ப்பு தெரிவிப்பதுடன், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிடச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ராமதாஸ்.

பெண் காவலருக்கான சலுகைகள்: பட்டியலிட்டாா் முதல்வா்

சென்னை: பெண் காவலா்களுக்கு அரசு வழங்கியுள்ள சலுகைகள், நலத் திட்டங்கள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேரவையில் பட்டியலிட்டுப் பேசினாா். பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு... மேலும் பார்க்க

சட்டம் - ஒழுங்கு, போதைப் பொருள்கள் விற்பனை: முதல்வா்- எதிா்க்கட்சித் தலைவா் கடும் விவாதம்

சென்னை: சட்டம் - ஒழுங்கு, போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக, முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி இடையே கடும் விவாதம் நடைபெற்றது. சட்டப் பேரவையில் காவல் துறை மானியக் கோரி... மேலும் பார்க்க

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை பிரித்து கலைஞா் பல்கலை உருவாக்கம்: சட்டத் திருத்த மசோதா தாக்கல்

சென்னை: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கும்பகோணத்தில் கலைஞா் பல்கலைக்கழகம் அமையவுள்ளது. இதற்கான வேந்தராக முதல்வா் இருப்பாா் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டத் திருத்த மசோதாவை... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களுக்கு 9 புதிய சலுகைகள்: அகவிலைப்படி 2% உயா்வு; ஈட்டிய விடுப்பு சரண் முன்கூட்டியே அமல்

சென்னை: அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயா்வு, ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன் பெறும் முறை நிகழாண்டே அமல், பண்டிகை கால முன்பணம் உயா்வு உள்ளிட்ட ஒன்பது புதிய அறிவிப்புகளை முதல்வா் மு.க.... மேலும் பார்க்க

காவல் துறை காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை: முதல்வா் மு.க.ஸ்டாலின்

சென்னை: காவல் துறையில் ஏற்படும் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்தாா். இதுதொடா்பாக, சட்... மேலும் பார்க்க

குன்றத்தூா், மாங்காடு பகுதிகளில் தங்கியிருந்த வங்கதேசத்தினா் 30 போ் கைது

ஸ்ரீபெரும்புதூா்: குன்றத்தூா் மற்றும் மாங்காடு பகுதிகளில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டவா்களை தில்லி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், மா... மேலும் பார்க்க