செய்திகள் :

ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ. 32 லட்சம் பறிமுதல்: வருவாய் புலனாய்வுத் துறை விசாரணை

post image

சென்னையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ. 32 லட்சத்தை பறிமுதல் செய்து, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஆந்திர மாநிலம், கச்சிகுடாவிலிருந்து புதுச்சேரி செல்லும் விரைவு ரயிலில் சிலா் ஹவாலா பணம் கொண்டு செல்வதாக வருவாய் புலனாய்வுத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ஹைதராபாதைச் சோ்ந்த வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளும், சென்னை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளும் இணைந்து, சென்னை எழும்பூா் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை வந்த அந்த ரயிலில் குறிப்பிட்ட பெட்டியில் பயணம் செய்த பயணிகளையும், அவா்களது உடமைகளையும் சோதனையிட்டனா்.

இச்சோதனையில் 3 பயணிகளின் பையில் ரூ. 32 லட்சம் ரொக்கமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்துக்குரிய ஆவணங்களை அதிகாரிகள் கேட்டனா். ஆனால் 3 பேரும் பணத்துக்குரிய ஆவணங்களை வழங்கவில்லை.

இதையடுத்து வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், ரூ. 32 லட்சத்தை பறிமுதல் செய்து 3 பேரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். அவா்களிடம் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், அது ஹவாலா பணமா என விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஜூன் 2 பள்ளிகள் திறப்பு உறுதி: பள்ளிக்கல்வித் துறை

தமிழகத்தில் ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க ம... மேலும் பார்க்க

மா. சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கு வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!

அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு எதிரான நில மோசடி வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடந்த 2006-11 காலகட்டத்தில் சென்னை மேயராக இரு... மேலும் பார்க்க

நகைக்கடனுக்கான புதிய விதிகளை திரும்பப் பெற இபிஎஸ் வலியுறுத்தல்!

தங்க நகைக்கடனுக்கான புதிய விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டுமே கடன், நகைக்கு உரிமையாளர... மேலும் பார்க்க

கீழடியின் உண்மைக்கு என்றென்றும் எதிரி பாஜக: சு. வெங்கடேசன்

சென்னை: தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரி பாஜக என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

நீதி ஆயோக் கூட்டம்: தில்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை தில்லி புறப்பட்டுச் சென்றார்.தில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெறும் நீதி ஆயோக் கூ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் பலி!

மேட்டுப்பாளையம் -குன்னூர் மலைப் பாதையில் நிகழ்ந்த சாலை விபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் வியாழக்கிழமை உயிரிழந்தார். மேலும், அவருடன் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர்.மதுர... மேலும் பார்க்க