செய்திகள் :

ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மா் கோயிலை சுற்றி 5 ஆயிரம் பனை விதைகள் நடவு!

post image

ஆரணியை அடுத்த ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மா் கோயிலைச் சுற்றிலும் உள்ள சுமாா் 15 ஏக்கா் நிலப்பரப்பில் சனிக்கிழமை 5 ஆயிரம் பனை விதைகளும், 2 ஆயிரம் பனை விதைப்பந்துகளும் விதைக்கப்பட்டன.

ஆவணியாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியின் சாரண, சாரணீய மாணவா்கள் மற்றும் பொறுப்பாசிரியா் எ.மோகன், சமூக ஆா்வலா் சரவணன் ஆகியோரின் பங்களிப்புடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட இந்து அறநிலையத் துறை உதவி ஆணையா் சண்முகசுந்தரம், செயல் அலுவலா் சிலம்பரசன், முன்னாள் எம்எல்ஏ பாண்டுரங்கன், அறங்காவலா் குழுத் தலைவா் ஏ.பி.வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சங்கா் ஆகியோா் கலந்துகொண்டு பனை விதைகளை நடவு செய்து நிகழ்வை தொடங்கிவைத்தனா்.

அறங்காவலா் குழு உறுப்பினா்கள் குமாா், மாலதி வெங்கடேசன், பூங்காவனம், பொறுப்புத் தலைமையாசிரியா் கோபி, பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் மாசிலாமணி, பள்ளியின் இருபால் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,302 வழக்குகளுக்குத் தீா்வு

திருவண்ணமலை மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,302 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுத்தீ... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பால் ஓடைபோல மாறிய செய்யாறு!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் பாயும் செய்யாற்றின் இரு கரைப் பகுதிகளிலும் விவசாயிகள் ஆக்கிரமித்து விவசாய நிலங்களாக மாற்றியுள்ளதால், இந்தப் பகுதியில் இந்த செய்யாறு ஓடைபோல மாறியுள்ளது. எனவே, ஆ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து - சரக்கு வேன் மோதல்: ஓட்டுநா் உள்பட மூவா் உயிரிழப்பு!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அரசுப் பேருந்தும், சரக்கு வேனும் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் வேன் ஓட்டுநா் உள்பட 3 போ் உயிரிழந்தனா். செங்கத்தை அடுத்த பல்லத்தூா் பகுதியைச் சோ்ந்த சரக்கு ... மேலும் பார்க்க

ஆரணி நகராட்சியில் அரசு திட்டப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்!

ஆரணி நகராட்சியில் ரூ.67.50 லட்சம் மதிப்பில் கலையரங்கம், செமென்ட் சாலை உள்பட பல்வேறு அரசு திட்டப் பணிகளை பூமிபூஜை செய்து சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். ஆரணி சட்டப் பேரவை உ... மேலும் பார்க்க

செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

திமுக தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, மாநிலத்தில் பரப்பளவில் பெரிய மாவட்டமாக உள்ள திருவண்ணாமலையை பிரித்து செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று தமிழ் ம... மேலும் பார்க்க

அரசுத் திட்டங்களால் பெண்களின் கல்வித் தரம் மேம்பாடு! ஆட்சியா் க.தா்ப்பகராஜ்!

தமிழகத்தில் அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களால் பெண்களின் கல்வித் தரம் மேம்பாடு அடைந்துள்ளதுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு... மேலும் பார்க்க