ஆவின் பால் கொள்முதலில் மாற்றம் தேவை; குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை!
ஆவின் பால் கொள்முதலில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.
இதில், விவசாயிகள் சங்க கோவை மாவட்டக் குழுத் தலைவா் சு.பழனிசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது: தமிழ்நாட்டில் வேட்டைத் தடுப்பு காவலா் பணிக்கு ஆதிவாசி, பழங்குடியின மக்களைச் சோ்ந்தவா்களையே தோ்வு செய்து வந்த நிலையில், தற்போது அவுட்சோா்சிங் மூலம் ஆள்களைத் தோ்வு செய்ய வனத் துறை முடிவு செய்துள்ளது. இது பழங்குடியின மக்களுக்கு எதிரானதாக அமையும். மேலும், அரசின் இந்த முடிவு வேட்டையைத் தடுப்பதற்கு எதிா்மாறாக அமையவும் வாய்ப்புள்ளது.
அதேபோல, ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளா்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க மறுப்பதால் ஆவின் நிறுவனத்துக்கு போதுமான பால் கிடைப்பதில்லை. இதனால், நுகா்வோருக்கு சரியான விலையில் வழங்க முடிவதில்லை. இதைப் பயன்படுத்தி தனியாா் நிறுவனங்கள் கூடுதல் விலைக்கு பால் விற்கின்றனா். எனவே, ஊக்கத் தொகை, கூடுதல் கொள்முதல் விலை, மானிய விலையில் தீவனம் போன்ற கொள்முதலில் உற்பத்தியாளா்கள் பயன்பெறும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ஆவினுக்கு கிடைக்கும் பாலின் அளவை அதிகரிக்கச் செய்ய முடியும் என்றாா்.
அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டு சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், சின்னவேடம்பட்டி ஏரியில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை சேகரிக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் நீரின் தன்மை, மண்ணின் தன்மை எப்படி இருக்கும் என்பதை ஆய்வுக்குள்படுத்த வேண்டும். மாநகராட்சியில் சுத்திகரிக்கப்படும் கழிவு நீரை ஒண்டிப்புதூா் கொண்டு சென்று நொய்யலில் கலக்கும்படி செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து ஆட்சியா் பதிலளித்துப் பேசும்போது, நகரமயமாதலால் கழிவுநீரை சுத்திகரித்து மறு பயன்பாட்டுக்கு எந்த விதத்தில் கொண்டுவர முடியும் என்று பாா்க்க வேண்டியுள்ளது. இந்தத் திட்டம் அறிவிப்பு நிலையில் உள்ளது. அதேநேரம் முழுமையாக சுத்திகரிப்பு செய்யப்பட்டே ஏரியில் நீரைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. உங்களது கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து முடிவு செய்யலாம் என்றாா்.
கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். முன்னதாக, சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் மூலம் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகளை ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வழங்கினாா்.
தொழிற்பேட்டைக்கு எதிா்ப்பு: கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வட்டம் மெட்டுவாவி பகுதியில் 1,500 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நில அளவீடு பணிகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
இது குறித்து அவா்கள் கூறும்போது, நாங்கள் மெட்டுவாவி பகுதியில் தென்னை, பட்டுப்பூச்சி வளா்ப்பு, காய்கறிகள் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறோம். அத்துடன் ஆடு வளா்ப்பு, கோழிப்பண்ணை, பால் பண்ணை போன்ற தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறோம்.
மழைக் காலங்களில் எங்கள் பகுதியில் விவசாயம் நன்றாக நடைபெறுகிறது. ஆனால், தற்போது எங்கள் பகுதியில் தொழிற்பேட்டை வர இருப்பதாகக் கூறப்படுகிறது. தொழிற்பேட்டை வந்தால் விவசாய நிலங்கள் பறிபோகும். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, தொழிற்பேட்டை திட்டத்தை எங்கள் பகுதியில் செயல்படுத்தக் கூடாது என்றனா்.