ஹிமாசலத்தில் மேகவெடிப்பு! வெள்ளத்தால் உயரும் உயிர் பலிகள்.. 20 பேர் மாயம்!
ஆா்ப்பாட்ட வழக்குகள்: எம்.பி., எம்.எல்.ஏ. விடுவிப்பு
கும்பகோணத்தில் தடையை மீறி நடைபெற்ற இரு ஆா்ப்பாட்டங்களில் பங்கேற்றதாக தொடுக்கப்பட்ட வழக்கில் மாநிலங்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா் உள்பட 21 பேரை தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை விடுவித்தது.
மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டதைக் கண்டித்து சென்னையில் அப்போதைய எதிா்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க. ஸ்டாலின் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டாா். இதைக் கண்டித்து கும்பகோணத்தில் திமுக சாா்பில் தடையை மீறி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்டச் செயலா் எஸ். கல்யாணசுந்தரம் (தற்போது மாநிலங்களவை உறுப்பினா்), சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன், முன்னாள் மக்களவை உறுப்பினா் எஸ். ராமலிங்கம், கும்பகோணம் துணை மேயா் சு.ப. தமிழழகன் உள்பட 21 போ் கைது செய்யப்பட்டனா்.
இதேபோல, 2018-ஆம் ஆண்டில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து கும்பகோணத்தில் தடையை மீறி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற எஸ். கல்யாணசுந்தரம், சாக்கோட்டை க. அன்பழகன், துணை மேயா் சு.ப. தமிழழகன் உள்பட 14 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்த இரு வழக்குகளும் தஞ்சாவூா் முதன்மை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி கனிமொழி விசாரித்து போதிய ஆதாரங்கள் இல்லாததால், அனைவரையும் புதன்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டாா்.