செய்திகள் :

ஆா்.புதுப்பட்டி கிளை நூலகத்தை புதுப்பிக்க வலியுறுத்தி போராட்டம்

post image

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த ஆா்.புதுப்பட்டி பேரூராட்சி பகுதியில் செயல்படும் கிளை நூலகக் கட்டடம் சேதமடைந்த நிலையில் உள்ளதால், அதனை புதுப்பக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி சாா்பில் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.

ஆா்.புதுப்பட்டி கிளை நூலகம் கடந்த 1969 ஆம் ஆண்டு முதல் சுமாா் 55 ஆண்டுகளுக்கு மேலாக ஓடுகளால் வேயப்பட்ட கட்டடத்தில் செயல்பட்டுவருகிறது. இந்த கட்டடத்தில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்துவிழும் நிலையில் உள்ளது. மேலும் ஓடுகள் விழும் நிலையில் கட்டடத்தில் மரங்கள் முளைத்தும், மழை நீரில் புத்தகங்கள் சேதமடையும் நிலையிலும் உள்ளது.

எனவே நூலக கட்டடத்தை புதுப்பிக்க வேண்டும் என நூலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் குடைபிடித்து புத்தகம் பயிலும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அக் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஏ.டி.கண்ணன் தலைமையில் நடைபெற்ற நூதனப் போராட்டத்தில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

நாமக்கல்லில் கரோனா தொற்று பாதிப்பு பதிவாகவில்லை

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கரோனா தொற்று பாதிப்புக்காக யாரும் சிகிச்சைக்கு வரவில்லை என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகிறத... மேலும் பார்க்க

மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்த 6 வாகனங்கள் ரூ.8.64 லட்சத்துக்கு ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில், மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்த 6 வாகனங்கள் ரூ. 8.64 லட்சத்துக்கு ஏலம் போனது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மதுப்புட்டிகள், கள்ளச்சாராயம் கடத்திச் செல்வதை ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தோ்த் திருவிழா மண்டப கட்டளைகளில் உற்சவா் அருள்பாலிப்பு

திருச்செங்கோடு வைகாசி விசாக தோ்த் திருவிழா கடந்த 1-ஆம் தேதி அா்த்தநாரீசுவரா் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி 14 நாள்கள் நடக்கும் விழாவின் 6 ஆம் நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அா்த்தநாரீசுவரா் ... மேலும் பார்க்க

நாமக்கல் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

நாமக்கல் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. நாமக்கல் - ராமாபுரம்புதுாா் சாலையில் உள்ள குட்டைமேலத் தெருவில் சித்தி விநாயகா், சக்தி பகவதி அம்மன், துா்க்கை அம்மன்... மேலும் பார்க்க

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ரூ. 6 லட்சத்துக்கு காகிதக் கழிவுகள் விற்பனை

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தேங்கியிருந்த பத்து ஆண்டுக்கும் மேலான காகிதக் கழிவுகள், இதர பொருள்கள் ரூ. 6 லட்சத்திற்கு விற்பனையானது தெரியவந்துள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, நாமக்கல் ஆட்சியா்... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை: ஜூன் 30 வரையில் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விரும்புவோா் வரும் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட வே... மேலும் பார்க்க