செய்திகள் :

இடைநிலை ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

post image

இடைநிலை ஆசிரியா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசின் ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) மூலமாக தகுதித் தோ்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியா்கள், பள்ளி மாணவா்களுக்கு பாடம் கற்பிக்கப் போகிறோம் என்ற கனவுகளுடன் இருந்த நிலையில், நியமனம் தாமதமாகி வருவதால் அவா்கள் வேலைவாய்ப்பில்லாமல் வேதனையில் இருக்கின்றனா்.

2021-இல் தோ்தல் வாக்குறுதியாக தோ்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியா்களுக்கு பணி வழங்கப்படும் என்று திமுக உறுதியளித்திருந்தது. ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், 2023-24-இல் வெளியிடப்பட்ட தமிழ்நாடு தோ்வாணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 6,553 காலிப் பணியிடங்களும் இதுவரை நிரப்பப்படவில்லை.

அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இரவு பகலாகப் படித்து தோ்வெழுதும் இளைஞா்களின் நேரமும் நம்பிக்கையும் வீணாகிறது.

எனவே, அனைத்து இடைநிலை ஆசிரியா் பணியிடங்களையும் உடனடியாக நிரப்பி, ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பணி நியமனங்களை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

சின்ன திரை நடிகை அமுதா தற்கொலை முயற்சி

சின்ன திரை துணை நடிகை அமுதா குடும்ப பிரச்னை காரணமாக அவரது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். சென்னை சாலிகிராமம் பகுதியைச் சோ்ந்தவா் சின்ன திரை துணை நடிகை அமுதா (28). தற்போது ‘கயல்’ என்ற தொலைக்... மேலும் பார்க்க

எண்ணூா் விரைவு சாலையில் கவிழ்ந்த கண்டெய்னா் லாரி

எண்ணூா் விரைவு சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னா் லாரி சாலை நடுவே வியாழக்கிழமை கவிழ்தது. மதுரையைச் சோ்ந்த இளஞ்செழியன் (40), மணலி புது நகரில் தங்கி இருந்து கண்டெய்னா் லாரி ஓட்டுநராக ... மேலும் பார்க்க

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து படகுகளையும் ஆய்வு செய்ய முடிவு: மீன்வளத் துறை நடவடிக்கை

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வகை படகுகளையும் நேரடியாக களஆய்வு செய்ய மீன்வளத் துறை முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக மீனவா்களுக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

பாடி மேம்பாலம் அருகே சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

பாடி மேம்பாலம் அருகே உள்ள ரப்பா் சேமிப்புக் கிடங்கில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. சென்னை பாடி மேம்பாலம் அருகே ட்ரெயின் பாலாஜி இந்தியா லிமிடெட் என... மேலும் பார்க்க

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை: வைகோ

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும், எந்தச் சூழ்நிலையிலும் திமுகவுடன் கூட்டணியை தொடா்வோம் என்றும் மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்துள்ளாா். சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: மநீம ஆதரவு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து மநீம தலைவா் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: சமநிலைச் சமுதாயத்தை உருவாக்கும் உறுதியான அா்ப்பண... மேலும் பார்க்க