செய்திகள் :

இணையவசதி இல்லாமல் இயங்கும் பிட்சாட் செயலி! சிறப்பம்சங்கள்...

post image

இணையவசதி இல்லாமல் இயங்கும் ’பிட்சாட்’ என்ற செயலியை ட்விட்டர் (தற்போது எக்ஸ்) இணை நிறுவனர் ஜாக் டார்ஸி அறிமுகம் செய்துள்ளார்.

வாட்ஸ்அப், டெலிகிராம், முகநூல் போன்ற மற்றவர்களுடன் தகவல் பரிமாறிக் கொள்ளும் செயலிகளுக்கு இணையவசதி கட்டாயம் தேவை. இணையவசதி இல்லையென்றால், தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியாது. பேரிடர் மற்றும் இணையசேவை முடக்கம் போன்ற காலங்களில் தகவல் பரிமாற்றம் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றது.

இந்த நிலையில், இணையவசதி இல்லாமல் ப்ளூடூத் நெட்வொர்க்கை அடிப்படையாகக் கொண்டு பிட்சாட் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் இணையவசதி, சிம் கார்டு இல்லாமல் தகவலை (மெசேஜ்) பரிமாறிக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியுரிமைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இந்த செயலியைப் பயன்படுத்த பதிவு செய்ய அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வித பயனர்பெயர், கடவுச்சொல் போன்றவையும் இதில் இல்லை.

சிறப்பம்சங்கள்

  • தொடர்பில் இருப்பவர்களுக்கு தற்காலிக மெசேஜ் அனுப்ப முடியும்

  • குரூப் சாட்களை எளிதாக உருவாக்க முடியும்

  • பாதுகாக்கப்பட்ட கடவுச்சொல் கொண்ட ஆலோசனை அரங்கை உருவாக்க முடியும்

  • இந்த சர்வர் சென்டர் சர்வர் அடிப்படையில் இயங்காது, இதனால் டிராக் செய்ய முடியாது

  • டேப் செய்தால் அனைத்து தரவுகளும் அழியும் வசதி உள்ளது

படம்: ஜாக் டார்ஸி/எக்ஸ்

எப்போது பயனுக்கு வரும்?

பிட்சாட் செயலி தற்போது முழு சோதனையில் இருப்பதாகவும் விரைவில் ஆப்பிள் ஸ்டோரில் வெளியிடப்படும் என்றும் ஜாக் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அடுத்தகட்டமாக வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Twitter (now X) co-founder Jack Dorsey has launched an app called 'BitChat' that works without internet access.

இதையும் படிக்க : இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறுத்த முடியுமா? கடைசி வாய்ப்பு

ஒருமுறை சார்ஜுக்கு 142 கி.மீ. பயணம்! ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய விடா வி-எக்ஸ் மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விடா என்ற பெயரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருக... மேலும் பார்க்க

சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! ஐடி பங்குகள் வீழ்ச்சி!

பங்குச்சந்தைகள் இன்று(வியாழக்கிழமை) சற்றே ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில் தற்போது சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,658.20 என்ற புள்ளிகளில் தொடங்... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 160 அதிகரித்துள்ளது.சென்னையில் தங்கம் விலை வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.72,080-க்கு விற்பனையான... மேலும் பார்க்க

எல்ஐசி-யின் புதிய காப்பீட்டு திட்டங்கள்

நவ் ஜீவன் ஸ்ரீ (திட்டம் 912), எல்ஐசியின் நவ் ஜீவன் ஸ்ரீ ஒற்றை பிரீமியம் (திட்டம் 911) ஆகிய இது காப்பீட்டு திட்டங்களை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) அறிமுகப்படுத்தியுள்ளது.இது குறித்து நிறு... மேலும் பார்க்க

ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் உற்பத்தி 14% அதிகரிப்பு!

புதுதில்லி: ஜூன் மாத முடிய காலாண்டில் நிறுவனத்தின் ஸ்டீல் உற்பத்தி 14 சதவிகிதம் அதிகரித்து 7.26 மில்லியன் டன்னாக உள்ளதாக ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் தெரிவித்துள்ளது. இதுவே கடந்த வருடம் இதே காலகட்டத்தில் அதன... மேலும் பார்க்க

நம்ம முடியாத விலையில் ஒன்பிளஸ் பேட் லைட்! இந்தியாவில் அறிமுகம்

ஒன்பிளஸ் பேட் லைட் என்ற புதிய கையடக்கக் கணினியை இந்திய சந்தைக்கு ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இங்கிலந்து, ஐரோப்பா நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவில் ஒன்பிளஸ் பேட் லைட் அறிமுகமாகியுள்ளது. ஒன்பி... மேலும் பார்க்க