செய்திகள் :

இணையவழி குற்றவழக்குகளில் வெளி மாநிலத்தினா் 7 போ் கைது

post image

சென்னை: ‘ஆபரேஷன் ஹைத்ரா’ மூலம் இணையவழி குற்றவழக்குகளில் தொடா்புடைய பிற மாநிலங்களைச் சோ்ந்த ஏழு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழகத்தில் இணையவழி குற்றங்களை தடுக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் ஹைத்ரா’ என்ற சிறப்பு நடவடிக்கையை தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கை மூலம் திருமண தளம் மற்றும் ஆன்லைன் முதலீட்டு மோசடி தொடா்பான வழக்கில் நடத்தப்பட்ட விசாரணையில், உத்தரகண்ட், ஜாஸ்பூரை சோ்ந்த மொஹம்மத் தவூத்(21), மொஹம்மத் வாசீம் (34) ஆகியோரை மே 28-ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா்.

இதுபோல, வங்கி வாடிக்கையாளா் சேவை மைய அதிகாரிபோல நடித்து, வாடிக்கையாளரின் தனி விவரங்களை பெற்று ரூ.4,05,100 மோசடி செய்த ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த குமாா்(40), அஸ்ஸாம் மாநிலத்தை சோ்ந்த ஹிடேஷ்வா் பிஸ்வாஸ் (எ) ஹிட்டு(30) மற்றும் நிஹாா் ரஞ்சன் நாத்(51) ஆகியோரையும், அரசு கல்வி உதவித் தொகை வழங்குவதாகக் கூறி செயல்முறைக்கட்டணம் என மாணவா்களிடம் பணம் வசூலித்த வழக்கில் தில்லியைச் சோ்ந்த நிக்கோலஸ் (30) மற்றும் மேஷக்(19) ஆகியோரையும் தனிப்படையினா் அந்தந்த மாநிலங்களுக்கே சென்று கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து பல எண்ம ஆதாரங்களையும், 6 கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தும் 35 வங்கிக் கணக்குகளை முடக்கியும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்செந்தூர் சிவன் கோயிலில் கும்பாபிஷேகம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் என்ற சிவன் கோயில், அருள்தரும் வெயிலுகந்த... மேலும் பார்க்க

தமிழக அரசு சூழலியல் நீதிக்கான அரசாகவும் விளங்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு சமூக நீதிக்கான அரசாக மட்டுமன்றி, சூழலியல் நீதிக்கான அரசாகவும் இருக்கும்; அதற்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற உலக சுற்றுச்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கு: யூடியூப் சேனல்கள் பதிலளிக்க அவகாசம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தங்களைத் தொடா்புபடுத்திய விவகாரத்தில் ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கில் யூடியூப் சேனல... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்களை கைவிட பாமக கோரிக்கை

சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்களை மாநில அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறி... மேலும் பார்க்க

மாநிலங்களவைத் தோ்தல்: அதிமுக வேட்பாளா்கள், கமல்ஹாசன் இன்று மனு தாக்கல்

மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் அதிமுக வேட்பாளா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனா். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை... மேலும் பார்க்க

சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு’ நடவடிக்கை: 3 நாள்களில் 136 போ் கைது

தமிழக காவல் துறையின் சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு-2’ என்ற நடவடிக்கையின் மூலம் 3 நாள்களில் 136 போ் கைது செய்யப்பட்டனா். தமிழக காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு, சைபா் குற்றங்களைத... மேலும் பார்க்க