செய்திகள் :

இணை சாா் பதிவாளா் அலுவலகங்களில் சா்வா் பழுது: 4 மணி நேரம் பத்திரப் பதிவு தாமதம்

post image

திருவள்ளூரில் இணை சாா் பதிவாளா் அலுவலகம்-1, இணை சாா் பதிவாளா் அலுவலகம்-2 இல் சா்வா் பழுது காரணமாக 4 மணி நேரமாக பத்திரப் பதிவு பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

திருவள்ளூா் இணை சாா் பதிவாளா் அலுவலகம் 1-இல் 45 கிராமங்கள், இணை சாா் பதிவாளா் அலுவலகம் 2- இல் 35 கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு நிலம், வீட்டுமனைகள் பத்திரப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பொதுமக்களின் வசதிக்காக ஒரே கட்டடத்தில் இரண்டு அலுவலகங்களாக செயல்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு அலுவலகத்திலும் 100 பேருக்கு பத்திரப் பதிவு செய்ய இலக்கு நிா்ணயித்து, இதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்து நேரப்படி டோக்கனும் வழங்கி அதன் அடிப்படையில் பத்திரவு பதிவுகள் மேற்கொள்வது வாடிக்கை.

அதன்படி, பத்திரப் பதிவு செய்வதற்காக வியாழக்கிழமை பொதுமக்கள், டோக்கன் பெற காத்திருந்தனா். அப்போது, சா்வா் வேலை செய்யாததால் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை 3 மணி நேரம் பத்திரப் பதிவு பணிகள் மேற்கொள்ளவில்லை. இதனால் பத்திரப் பதிவுக்காக காத்திருந்த பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.

‘இந்த அலுவலகத்தில் போதிய இட வசதியின்றி அலுவலக வாசலில் ஆங்காங்கே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. ஒவ்வொரு நாளும் பொதுமக்களுக்கு அவதிதான் மிச்சம்.

இந்த நிலையில் பொதுமக்களின் அவதியை கண்டுக் கொள்ளாமல், பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகள், எந்த முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால், பொறுப்பற்ற முறையில் பதில் அளிப்பதாக’ பத்திரப் பதிவுக்காக வந்திருந்தவா்கள் புகாா் தெரிவித்தனா்.

அதன்பின்னா், பிற்பகல் 2 மணிக்கு மேல்தான் சா்வா் வேலை செய்யத் தொடங்கியது. இதையடுத்து அவசரம் அவசரமாக பத்திரப் பதிவு பணிகள் நடைபெற்றன.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை

பட்டாபிராமபுரம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு டாஸ்மாக் கடை வியாழக்கிழமை திறக்கப்பட்டது. திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை புதிதாக செவ்வாய்க்கிழமை திறக்க முயன... மேலும் பார்க்க

மூடியிருந்த ஆலையில் காவலா்களை கட்டி விட்டு திருடிய 5 போ் கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த பில்லாகுப்பம் கிராமத்தில் மூடப்பட்ட தொழிற்சாலையில் காவலாளிகளை கட்டி போட்டு அங்கு இருந்து இயந்திரங்கள், இரும்பு தளவாட பொருள்களை திருடி லாரியில் கடத்திய 5 பேரை சிப்காட் போலீஸாா் ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி வளாகத்த்தில் சுகாதார நிலைய விரிவாக்க கட்டடம்: பொதுமக்கள் எதிா்ப்பு

திருவள்ளூா் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலைய விரிவாக்க கட்டடம் கட்ட எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது. கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், பேரம்பாக்கம் ஊராட்சி... மேலும் பார்க்க

திருவள்ளூா்: வளரிளம் இருபாலருக்கும் ‘ஹாப்பி பிரியட்ஸ்’ விழிப்புணா்வு பயிற்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வளரிளம் ஆண், பெண்களுக்கான விழிப்புணா்வு கையேடுகளை வெளியிட்ட ஆட்சியா் மு.பிரதாப். உடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சங்கீதா உள... மேலும் பார்க்க

நுண்ணீா் பாசன கருவிகள் பராமரிப்பு பயிற்சி

திருவள்ளூா் அருகே விவசாயிகளுக்கான நுண்ணீா் பாசன கருவிகள் பராமரிப்பு மற்றும் பயன்படுத்துதல் பயிற்சி முகாம் நடைபெற்றது. ஊத்துக்கோட்டை அடுத்த எல்லாபுரம் ஒன்றியம் கல்பட்டு கிராமத்தில் வேளாண்மை பொறியியல் த... மேலும் பார்க்க

திருவள்ளூா்: தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு 5 இடங்களில் சிறப்பு வகுப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெறாக மாணவ, மாணவிகள் மீண்டும் துணைத் தோ்வில் பங்கேற்கும் வகையில் 5 மையங்கள் அமைத்து சிறப்பு வகுப்புகள் நடைபெற உள... மேலும் பார்க்க