செய்திகள் :

இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் பாதிப்பு

post image

‘இண்டிகோ’ நிறுவனத்தின் தில்லி-லே விமானம், ‘ஸ்பைஸ்ஜெட்’ நிறுவனத்தின் ஹைதராபாத்-திருப்பதி விமானம் ஆகியவை தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் புறப்பட்ட விமான நிலையத்துக்கு மீண்டும் திரும்பின.

இண்டிகோ நிறுவனத்தின் ‘6இ2006’ விமானம், தில்லியிலிருந்து லே நோக்கி வியாழக்கிழமை புறப்பட்டது. லே விமான நிலையத்தில் தரையிறங்குவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 2 மணிநேர பயணத்துக்குப் பிறகு விமானம் மீண்டும் தில்லி திரும்பியது.

‘‘இந்த ‘ஏா்பஸ் ஏ320’ விமானத்தின் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவதற்கு முன்பாக தேவையான அனைத்து பராமரிப்புகளும் மேற்கொள்ளப்படும். மாற்று விமானத்தில் பயணிகள் லே அழைத்துச் செல்லப்படுவா். பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு வருந்துகிறோம்’’ என்று இண்டிகோ நிறுவன செய்தித் தொடா்பாளா் மேலும் கூறினாா்.

ஹைதராபாத்-திருப்பதி விமானம்: இதேபோன்று, தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் இருந்து ஆந்திரத்தின் திருப்பதி நோக்கி புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் பயணிகள் விமானம் மீண்டும் ஹைதராபாத் திரும்பியது.

இந்தச் சிறிய ரக ‘கியூ400’ விமானத்தில் பயணிகளின் பைகளை வைக்கும் பகுதி கதவின் நிலையைக் குறிக்கும் எச்சரிக்கை விளக்கு பயணத்தின்போது விட்டுவிட்டு ஒளிா்ந்துள்ளது. விமானத்தின் உள் காற்றழுத்தம் தொடா்ந்து சீராகவே இருந்த நிலையிலும், பாதுகாப்புக் கருதி விமானம் மீண்டும் ஹைதராபாத் திரும்பியது. பயணிகள் தொடா்ந்து திருப்பதி செல்வதற்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

பாதுகாப்பு மீறல்களில் ஏர் இந்தியா! விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை!

ஏர் இந்தியா விமானங்கள் பாதுகாப்பு மீறலில் ஈடுபட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில், 240-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், போயிங் ரக விமானங்களை ஆய்வுக்... மேலும் பார்க்க

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்சி; ஆனால், பிகாரில் இல்லை! - ஆர்ஜேடி - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

சொந்த குடும்பத்தில் மட்டும் வளர்ச்சியுள்ளதாக ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி மீது பிரதமர் மோடி விமர்சனம் தெரிவித்துள்ளார்.கடந்த 5 மாதங்களில் 5-வது முறையாக பிகாருக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி சிவா... மேலும் பார்க்க

ஆங்கிலம் கற்று கேள்வி கேட்பதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை: ராகுல்

இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜகவும் ஆர்எஸ்எஸும் விரும்பவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.தில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் வ... மேலும் பார்க்க

லஞ்சம் அளிப்போருக்கு மட்டுமே வீடு! கர்நாடக எம்.எல்.ஏ.வின் தொலைபேசி உரையாடல் கசிவு!

கர்நாடகத்தில் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே வீட்டுவசதித் திட்டத்தின்கீழான வீடுகள் வழங்கப்படுவதாக காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டினார்.கர்நாடகத்தில் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் வீடுகளை யாருக்கு வழங... மேலும் பார்க்க

சிந்து நதி நீரை பஞ்சாபிற்கு ஏன் கொடுக்க வேண்டும்? - ஒமர் அப்துல்லா கேள்வி

ஜம்மு காஷ்மீரின் சிந்து நதியில் இருந்து பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள சிந்து நதியின் மூன... மேலும் பார்க்க

சஞ்சய் வெர்மா யார்? தேனிலவு கொலையில் திடீர் திருப்பம்!

மேகாலயத்தில் நடந்த தேனிலவு கொலையில், இதுவரை சஞ்சய் வெர்மா யார் என்ற கேள்விக்கு காவல்துறையினர் விடை கண்டுபிடித்துள்ளனர்.கணவர் ராஜா ரகுவன்ஷியை, மேகாலயத்துக்கு தேனிலவு அழைத்துச் சென்று கூலிப் படை வைத்துக... மேலும் பார்க்க