செய்திகள் :

இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம்: பினராயி விஜயன் பேச்சு

post image

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு என்பது வெறும் எண்ணிக்கை மட்டும் சார்ந்தது அல்ல. இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள தனியாா் நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் ஏழு மாநிலங்களின் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில்,

தொகுதி மறுசீரமைப்பு என்பது வெறும் எண்ணிக்கை மட்டும் சார்ந்தது அல்ல. இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம். பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மாநிலங்களுடன் அர்த்தமுள்ள உரையாடலை மத்திய அரசு தொடங்க வேண்டும். மேலும் தெளிவுபடுத்த வேண்டியது கடமை மத்திய அரசுக்கு உள்ளது.

தென்மாநிலங்களின் தொகுதி குறைப்பு பாஜகவின் ஆதிக்கத்திற்கே வழிவகுக்கும். ஏற்கனவே நம் கலாசாரத்திலும், நம் மொழிக் கொள்கையிலும் தலையிடும் மத்தியில் ஆளும் பாஜக அரசு தற்போது நம் பிரதிநிதித்துவத்திலும் தலையிடுகிறது. இதனை அனைவரும் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்த வேண்டியது மிக முக்கியம். இந்த வரலாற்று சிறப்பு மிக்க போராட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்திருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள் என கூறினார்.

டி-மார்ட் போன்ற நிறுவனங்களை தடை செய்யாவிட்டால் விரைவில் போராட்டம்: விக்ரமராஜா

சேலம் : டி-மார்ட் போன்ற நிறுவனங்களை தடை செய்யாவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்ரமராஜா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். சேலம் ... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி நாளை ஆலோசனை

சென்னை: தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை (மாா்ச் 24) ஆலோசனை நடத்தவுள்ளாா்.த... மேலும் பார்க்க

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்: விஜய்

சென்னை: பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம... மேலும் பார்க்க

ஏப். 6-ல் உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை முதல்வா் திறந்து வைக்கிறாா்!

நீலகிரி: நாட்டிலேயே முதன் முறையாக பழங்குடியினா்களுக்கு என 50 படுக்கை வசதிகளுடன், மலை பிரதேசத்தில் அதிநவீன 700 படுக்கைகள் கொண்ட உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை ஏப்ரல் 6 ஆம் தேதி முதல்வர் மு.க.... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் போராட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் திமுக தோ்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈட... மேலும் பார்க்க

தமிழ்நாட்டையும், தமிழா்களையும் ஏளனம் செய்கிறாா் நிா்மலா சீதாராமன்: கனிமொழி குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாட்டையும், தமிழா்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஏளனம் செய்வதாக நாடாளுமன்ற திமுக குழு தலைவா் கனிமொழி குற்றச்சாட்டியுள்ளாா்.இது தொடா்பாக அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்... மேலும் பார்க்க