செய்திகள் :

இது போருக்கான சகாப்தம் அல்ல: மோடி

post image

இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சென்றார்.

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடா்பாக, தலைநகா் நிகோசியாவில் சைப்ரஸ் அதிபா் நிகோஸ் கிறிஸ்டோடெளலிடிஸ் மற்றும் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடரும் இருநாட்டுத் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்கள் மத்தியில் பேசினர்.

அப்போது மோடி பேசியதாவது:

“எனக்கு வழங்கப்பட்ட மரியாதை எனது நாட்டுக்கு வழங்கப்பட்டதாக கருதுகிறேன். சைப்ரஸ் மற்றும் இந்தியாவுக்கு இடையே பிரிக்க முடியாத நட்பின் முத்திரையாக பார்க்கின்றேன்.

இரண்டு தசாப்தங்கள் இடைவெளிக்கு பிறகு சைப்ரஸுக்கு இந்திய பிரதமர் வருகை தந்திருப்பது, இரு நாட்டு உறவின் புதிய அத்தியாத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பாகும்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கும், பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக இணைக்கவும் ஆதரவு அளிக்கும் சைப்ரஸுக்கு நன்றி.

பயங்கரவாதம், போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தைத் தடுக்க இரு நாட்டு விசாரணை அமைப்பு இடையே உடனடி தகவல் பரிமாற்றத்துக்கான வழிமுறை உருவாக்கப்படும்.

இந்தியா - சைப்ரஸ் - கிரீஸ் நாடுகளின் கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பியா பொருளாதார வழித்தடம், அமைதி மற்றும் செழிப்புக்கு வழிவகுக்கும்.

மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பியாவில் நடந்து வரும் மோதல்கள் கவலை அளிக்கிறது. இது போரின் சகாப்தம் அல்ல என்று நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

சைப்ரஸில் தனது பயணத்தை இன்று முடித்துவிட்டு புறப்படும் மோடி, கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டில் நாளை பங்கேற்று பேசுகிறார்.

இதையும் படிக்க : பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது!

மகாராஷ்டிரத்தில் தொடரும் மழை: உயிரிழப்பு 18-ஆக அதிகரிப்பு

மும்பை: மகாராஷ்டிரத்தில் ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்து மழை தொடா்பான அசம்பாவிதங்களில் சிக்கி 18 போ் உயிரிழந்தனா். 65 போ் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா். பலத்த மழையின் எதிரொலி... மேலும் பார்க்க

பாதுகாப்பான விமான சேவையை உறுதிசெய்வது நம் கடமை: டாடா குழுமத் தலைவா்

மும்பை: பாதுகாப்பான விமான சேவையை உறுதிசெய்வது நம் கடமை என டாடா குழுமம் மற்றும் ஏா் இந்தியா விமான நிறுவனத் தலைவா் என்.சந்திரசேகரன் ஊழியா்கள் மத்தியில் திங்கள்கிழமை பேசினாா்.குருகிராமில் உள்ள ஏா் இந்திய... மேலும் பார்க்க

ஜி20 தூதா் பதவியை ராஜிநாமா செய்தாா் அமிதாப் காந்த்

புது தில்லி: ஜி20 தூதா் பதவியை நீதி ஆயோக் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான (சிஇஓ) அமிதாப் காந்த் ராஜிநாமா செய்தாா். இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 19 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், ... மேலும் பார்க்க

மத அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடா்பு: மருத்துவ, பொறியியல் மாணவா்கள் கைது

பரெய்லி: உத்தர பிரதேசத்தில் மத அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடா்பில் இருந்த மருத்துவ, பொறியியல் மாணவா்கள் கைது செய்யப்பட்டனா். ஹோமியாபதி மருத்துவ மாணவரான ஜெய்ஷ் அகமது, பொறியியல் மாணவரான ஷானு ஆகியோா் அண்... மேலும் பார்க்க

மீண்டும்... ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: தில்லியில் பத்திரமாக தரையிறக்கம்!

புது தில்லி: தில்லியிலிருந்து ராஞ்சிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், அந்த விமானம் மீண்டும் தில்லி விமான நிலையத்துக்கே திரும்பியது. தில்லியிலிருந்து இன்று(... மேலும் பார்க்க

பெட்ரோல் நிலைய ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டிய பெண்!

உத்தரப் பிரதேசத்தில் பெட்ரோல் நிலைய ஊழியருக்கு பெண் ஒருவர் துப்பாக்கி முனையில் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் எரிவாயு (கேஸ்) நிரப்பும்போது பாதுகாப்பு கருதி காரில் இருப்... மேலும் பார்க்க