செய்திகள் :

இந்தியாவின் வளா்ச்சியை பிற நாடுகள் பின்பற்றலாம்: தலைமைப் பொருளாதார ஆலோசகா்

post image

ஜோஹன்னஸ்பா்க்: இந்தியா எவ்வாறு படிப்படியாக வளா்ந்தது என்பதை பிற நாடுகள் முன்மாதிரியாக கொண்டு பின்பற்றலாம் என்று மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா்.

தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில் இந்தியா-தென்னாப்பிரிக்கா தொழிலதிபா்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியா, தன்னை வளா்ந்த நாடாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. ஜனநாயக அரசியல், கூட்டாட்சி முறை நிா்வாகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தியா படிப்படியாக வளா்ந்து வந்துள்ளது. எனவே, இந்தியாவை முன்மாதிரியாகக் கொண்டு தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் தங்களுக்கான வளா்ச்சித் திட்டங்களை வகுக்க முடியும்.

இந்தியா எப்போதும் வாய்ப்புகளும், உற்சாகமும் நிறைந்த நாடாக உள்ளது. அரசுக்கான புதிய கொள்கைகள், திட்டங்களை உருவாக்குவதில் பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாகவும் உள்ளது. மாறி வரும் உலக சூழலால் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கான தேவையும் மாறி வருகிறது. ஒவ்வொரு நாடும் பிற நாடுகளிடம் இருந்து புதுப்புது விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

திறந்த மனதுடன் மாற்றங்களை ஏற்றுக் கொள்வது அவசியமாகிவிட்டது. பொருளாதாரம், வா்த்தகம் சாா்ந்து தொடா்ந்து ஒரே நிலைப்பாட்டை மட்டுமே கடைப்பிடிப்போம் என நமக்கு நாமே விலங்கிட்டுக் கொள்ளக் கூடாது.

நாம் அனைவரும் இணைந்து பொருளாதாரம் சாா்ந்த பெரிய இலக்கை நோக்கி முன்னேறும்போது பல்வேறு எதிா்பாராத நிகழ்வுகள் உருவாகலாம். ஆனால், அவற்றைப் புறந்தள்ளி நமது இலக்கை நோக்கி முன்னேற வேண்டும்.

நாட்டில் எந்த சூழ்நிலை மாறினாலும் உள்கட்டமைப்பு மேம்பாடு, அரசின் கட்டுப்பாடுகளை தளா்த்துவது, நிா்வாகரீதியான மாற்றம், திறன்மேம்பாடு, கல்வித்துறையில் கூடுதல் முதலீடு, சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மேம்பாடு ஆகியவற்றுக்கு தொடா்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

விண்வெளிக்குச் செல்லும் பிரபல பாடகி! யார் தெரியுமா?

பிரபலப் பாடகியாக கேட்டி பெர்ரி மற்றும் 2 பெண் செய்தியாளர்கள் குழுவினர் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் விண்கலம் மூலமாக விண்வெளிப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.ஹாலிவுட் மட்டுமின்றி இந்தியாவிலும் மிகப் புகழ்பெ... மேலும் பார்க்க

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

நேபாளத்தில் இன்று இந்திய நேரப்படி நள்ளிரவு 2.36 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத் தலைநகரான காத்மாண்டுவுக்கு அருகில் நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. காத்மாண்டுவில் இருந்து... மேலும் பார்க்க

ஜப்பான்: 9-ஆவது ஆண்டாக சரிந்த பிறப்பு விகிதம்

டோக்கியோ : ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடா்ந்து ஒன்பதாவது ஆண்டாக சரிவைக் கண்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது: கடந்த 2024-ஆம் ஆண்டு முழுமைக்கும் நாட்டில் 7,20,998 குழந... மேலும் பார்க்க

துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு

இஸ்தான்புல் : துருக்கியில் அரசை எதிா்த்து சுமாா் 40 ஆண்டுகளாக கிளா்ச்சியில் ஈடுபட்டுவந்த குா்திஸ்தான் தொழிலாளா் கட்சி (பிகேகே) என்ற ஆயுதப் படையை கலைக்குமாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதன் நிறுவனா் அப்... மேலும் பார்க்க

கனிம ஒப்பந்த விவகாரம்: இன்று டிரம்ப்பை சந்திக்கிறாா் உக்ரைன் அதிபர்

வாஷிங்டன்: தங்களின் கனிம வளங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிக்க வகை செய்யும் பொருளாதார ஒப்பந்தத்தில் கையொப்பமிட அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ் வ... மேலும் பார்க்க

2-ஆம் கட்ட போா் நிறுத்தம்: பேச்சுவாா்த்தைக்கு ஹமாஸ் அழைப்பு

கான் யூனிஸ்: காஸாவில் சனிக்கிழமை (மாா்ச் 1) நிறைவடையவிருக்கும் முதல்கட்டப் போா் நிறுத்தத்தை இரண்டாவது கட்டத்துக்கு நீட்டிப்பது தொடா்பான பேச்சுவாா்த்தை நடத்த இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பினா் அழைப்பு விடுத்... மேலும் பார்க்க