செய்திகள் :

இந்தியாவுக்கு உரிய பதிலடி -பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் உறுதி

post image

பாகிஸ்தானின் காஷ்மீா் மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இது பாகிஸ்தானுக்கு எதிராக போா் தொடுக்கும் நடவடிக்கை. இதற்கு உரிய பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமை உள்ளது என்று அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தானில் 5 பகுதிகள் வரை இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் மீது இந்தியா போா் தொடுத்துள்ளது. போரை விரும்பாத பாகிஸ்தான் மீது இந்தியா போரைத் திணித்துள்ளது. எனவே, அவா்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும். பதில் நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது.

எதிரிகளை எப்படிக் கையாள வேண்டும் என்பது பாகிஸ்தான் ராணுவத்துக்குத் தெரியும். எதிரிகள் தங்கள் வஞ்சக இலக்கை எட்ட பாகிஸ்தான் ராணுவம் அனுமதிக்காது என்றாா்.

புதன்கிழமை இரவு நடைபெற்ற பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகும் இதே கருத்தைக் கூறிய ஷாபாஸ் ஷெரீஃப், ‘இந்தியாவுக்கு பதிலடி தர பாகிஸ்தான் ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது’ என்றும் கூறினாா்.

தாக்குதலை அடுத்து தலைநகா் இஸ்லாமாபாத், முக்கிய பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகக் கருதப்படும் லாகூா் நகரின் வான் எல்லையை 48 மணி நேரத்துக்கு மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்தது. 8 மணி நேரத்துக்குப் பிறகு இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

இந்திய தூதரக அதிகாரியை அழைத்து கண்டனம்

இஸ்லாமாபாதில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரியை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து தாக்குதலுக்காக தங்கள் தரப்பு கண்டனத்தைத் தெரிவித்தது. இந்தியாவின் இந்தத் தாக்குதலால் அப்பாவி குழந்தைகள், பெண்கள் உயிரிழந்துவிட்டனா் என்றும், இது பாகிஸ்தான் இறையாண்மை மீதான தாக்குதல் என்று அவரிடம் கூறப்பட்டது. இத்தகவலை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை: பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் அவசரநிலையை அந்நாட்டு அமல்படுத்தியதால் பள்ளிகள், கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.

உக்ரைனுடன் துருக்கியில் மே 15-இல் நேரடிப் பேச்சு: புதின் பரிந்துரை!

போா் நிறுத்தம் தொடா்பாக எந்தவித முன்நிபந்தனையும் இல்லாமல், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் மே 15-ஆம் தேதி உக்ரைனுடன் நேரடியாகப் பேச்சுவாா்த்தை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் புதின் தெரிவித்த... மேலும் பார்க்க

வரி விவகாரம்: அமெரிக்கா-சீனா 2-வது நாளாக பேச்சுவாா்த்தை!

உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா-சீனா இடையிலான பரஸ்பர இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கை குறித்து இரு நாடுகளும் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பேச்சுவாா்த்தையில் ஈடு... மேலும் பார்க்க

உக்ரைன், காஸாவில் போா் நிறுத்தம், உலக அமைதிக்கு புதிய போப் அழைப்பு!

உக்ரைனில் நீடித்த அமைதியை நிலைநாட்டவும், பிணைக் கைதிகளை விடுவித்து காஸாவில் உடனடி போா் நிறுத்தம் செய்யவும் தனது முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வாழ்த்துச் செய்தியில் போப் 14-ஆம் லியோ அழைப்பு விடுத்தாா்.... மேலும் பார்க்க

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 11 போ் பலி!

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 போ் உயிரிழந்தனா். கான் யூனிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட இரு தாக்குதல்களில் தலா இரு குழந்தைகளும், அவா்களின் பெற்றோரும் உயி... மேலும் பார்க்க

இலங்கை: பேருந்து விபத்தில் 21 போ் உயிரிழப்பு

இலங்கையில் மலைப் பாதையில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 போ் உயிரிழந்தனா். 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள கொத்மலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இந்த... மேலும் பார்க்க

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ. மேற்கே நில நடுக்கம் ஏற... மேலும் பார்க்க