செய்திகள் :

இந்தியாவை விட, ரஷ்யாவிடம் ஆயில் அதிகம் வாங்கும் சீனா; வரி போட வாய்தா வாங்கும் டிரம்ப்!

post image

அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் சீனப் பொருள்களுக்கு 145 சதவிகித வரி; சீனாவில் இறக்குமதி ஆகும் அமெரிக்க பொருள்களுக்கு 125 சதவிகித வரி.

இப்படி இரு நாடுகளும் மாறி மாறி ராக்கெட் வேகத்தில் பரஸ்பர வரிகளை விதித்துகொண்டனர். ஆனால், இது கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கதை.

அதன் பிறகு, சமாதானம் ஏற்பட்டு, தற்போது அமெரிக்க பொருள்கள் மீது சீனாவில் 10 சதவிகித வரியும், சீனப் பொருள்கள் மீது அமெரிக்காவில் 10 சதவிகித வரியும் அமலில் உள்ளது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

90 நாள் அவகாசம்

முன்னர் அறிவிக்கப்பட்ட 145 சதவிகித வரி அமலுக்கு வருவதற்கான இரண்டாவது காலக்கெடுவை தற்போது அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

முன்னர் கொடுக்கப்பட்ட காலக்கெடுவின் படி, இன்று முதல் அந்த வரி அமலுக்கு வர இருந்தது. ஆனால், இந்தக் காலக்கெடுவைத் நவம்பர் 10-ம் தேதி வரை, 90 நாள் வரி நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், ட்ரம்ப், "சீனாவிற்கான 90 நாள் வரி நிறுத்தத்திற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சீனாவிற்கு அபராதம் உண்டா?

இந்தியா, பிரேசிலை விட, ரஷ்யாவில் இருந்து அதிக எண்ணெயை இறக்குமதி செய்வது சீனா தான். ஆனால், இதுவரை, அதற்கான வரியை சீனா மீது அமெரிக்கா விதிக்கவில்லை.

இது குறித்து அமெரிக்கா யோசித்து வருவதாக அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி வான்ஸ் தெரிவித்திருந்தார்.

ஆனால், இப்போது ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ள உத்தரவில், இந்த அபராதம் குறித்து எதுவும் கூறப்படவில்லை.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

"இந்தியா மீதான வரிவிதிப்பால் ரஷ்ய பொருளாதாரம் கலக்கம்" - ரஷ்யா குறித்து ட்ரம்ப்!

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி, ரஷ்யாவின் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் பேசியிருக்கிறார். வெள்ளை மாளிகையில் உரையாற்றிய அமெரிக்க அதிபர், உலகளாவிய அழுத்தங்களும் மற... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "எங்கள ரோட்ல போட்டுட்டு கியூபாவுக்காகப் பேசுறாரா ஸ்டாலின்" - சீமான்

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை தனியாருக்குத் தாரைவார்ப்பதை எதிர்த்தும், 'தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வோம்' என்ற தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் சென்னை மாநகரா... மேலும் பார்க்க

'அசிம் முனீர் ஒரு கோட் சூட் அணிந்த ஒசாமா பின்லேடன்!' - முன்னாள் அமெரிக்க அரசு அதிகாரி சாடல்

'எங்களது இருப்பிற்கு அச்சுறுத்தல் வந்தால், பாதி உலகையே அழித்துவிடுவோம்' என்கிற பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரின் பேச்சுக்கு எதிர்வினையாற்றி இருக்கிறார் முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின்.... மேலும் பார்க்க

'தாயுமானவர் திட்டத்தை' அறிமுகப்படுத்திய முதல்வர் - என்ன திட்டம் இது? எப்படி செயல்படும்?

இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 'தாயுமானவர் திட்டத்தை' தொடங்கி வைத்துள்ளார்.தாயுமானவர் திட்டம் என்றால் என்ன? கூட்டுறவுத் துறை சார்பில் வயது முதிர்ந்தவர்கள், மாற்று திறனாளிகள் வீட்டிற்கே நேர... மேலும் பார்க்க

Pension Scheme: "பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலுக்கு வருமா?" - நிர்மலா சீதாராமன் விளக்கம்

நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கிறது.நேற்று (ஆகஸ்ட் 11), மக்களவையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வருமான வரிச் சட்டத்தை நிறைவேற்றினார். பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர... மேலும் பார்க்க