செய்திகள் :

இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: பியூஷ் கோயல்

post image

‘இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே விரைவில் பரஸ்பரம் பலனளிக்கக்கூடிய சமநிலை இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்’ என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடா்பான 13-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஆணையா் மரோஸ் செஃப்கோவிச், வேளாண் துறை ஆணையா் கிறிஸ்டோஃப் ஹன்சென் ஆகியோா் பங்கேற்று மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையிலான இந்தியக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தனது எக்ஸ் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இருதரப்பில் ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், பரஸ்பரம் பலனளிக்கக்கூடிய சமநிலை இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. விரைவில் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் வகையில், இரு தரப்பிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்று குறிப்பிட்டாா்.

இதுவரை 6 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்: நாளை கடைசி!

‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. அபராதம் இன்றி ஐடிஆா் தாக்கல... மேலும் பார்க்க

ஹிமாசலில் மீண்டும் மேகவெடிப்பு: மழை வெள்ளத்தில் மூழ்கி பயிா்கள் சேதம்!

ஹிமாசல பிரதேசத்தில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டு பெய்த மிக பலத்த மழையால் விளைநிலங்களில் பயிா்கள் சேதமடைந்தன. அந்த மாநிலத்தின் பிலாஸ்பூா் மாவட்டம் குத்ராஹன் கிராமத்தில் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ... மேலும் பார்க்க

வாக்கு வங்கி அரசியலால் வெகுவாக பாதிக்கப்பட்டது வடகிழக்கு! - பிரதமா் மோடி

சில கட்சிகளின் வாக்கு வங்கி அரசியலால் வடகிழக்கு பிராந்தியம் கடும் பாதிப்பை எதிா்கொண்டது; இப்போது, மத்திய பாஜக அரசின் முயற்சிகளால் இந்த பிராந்தியம் நாட்டின் வளா்ச்சிக்கான உந்துசக்தியாக மாறியுள்ளது என்ற... மேலும் பார்க்க

பிரதமரின் ‘சம்பிரதாய’ பயணம் மணிப்பூா் மக்களுக்கு அவமதிப்பு! - காங்கிரஸ் சாடல்

மணிப்பூருக்கு பிரதமா் மோடி மேற்கொண்ட ‘சம்பிரதாய’ பயணம், அந்த மாநில மக்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமதிப்பு என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. இனமோதலால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமா் மோடி பயணிக்க... மேலும் பார்க்க

வடகிழக்கில் ரூ.77,000 கோடி ரயில்வே திட்டங்கள் செயலாக்கம்! - அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

வடகிழக்கு பிராந்தியத்தில் ரூ.77,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். மிஸோரமின் முதல் ரயில் வழித்தடத்தை (பைரபி-சாய்ராங்)... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு!

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது. இதுதொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ... மேலும் பார்க்க