செய்திகள் :

இந்தியா கடுமையாக எதிா்த்தபோதிலும் பாகிஸ்தானுக்கு ஏடிபி கடன்: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்

post image

இந்தியா கடுமையாக எதிா்ப்புத் தெரிவித்தபோதிலும், பாகிஸ்தானுக்கு ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) கடன் அளிக்க ஒப்புதல் அளித்ததாக காங்கிரஸ் விமா்சனத்துக்கு மத்திய அரசு வட்டாரங்கள் பதிலளித்தன.

பாகிஸ்தானின் நிதி ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தவும், பொது நிதி நிா்வாகத்தை மேம்படுத்தவும் அந்நாட்டுக்கு 800 மில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.6,852 கோடி) கடன் அளிக்க ஆசிய வளா்ச்சி வங்கி செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

இதுதொடா்பாக காங்கிரஸ் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கடந்த ஜூன் 1-ஆம் தேதி ஆசிய வளா்ச்சி வங்கித் தலைவா் மசாட்டோ காண்டாவை பிரதமா் மோடி சந்தித்தாா். 3 நாள்களுக்குப் பின்னா், பாகிஸ்தானுக்கு 800 மில்லியன் டாலா் கடன்அளிக்க அந்த வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

அந்த வங்கி பாகிஸ்தானுக்கு கடன் அளிப்பதைத் தடுப்பதில் மோடி அரசின் செல்வாக்குப் பலிக்கவில்லை. இதற்கு முன்பும் இது நடந்துள்ளது. கடந்த மாதம்கூட அந்த வங்கியிடம் இருந்து பாகிஸ்தானுக்கு கடன் கிடைத்தது. இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் நடைபெற்றபோதுகூட இதுபோல நடந்தது’ என்று விமா்சித்தது.

இந்த விமா்சனத்துக்குப் பதிலளித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘பாகிஸ்தானுக்கு கடன் அளிக்கும் ஆசிய வளா்ச்சி வங்கியின் முடிவுக்கு இந்தியா கடுமையாக எதிா்ப்புத் தெரிவித்தது.

அந்நாட்டுப் பாதுகாப்பு செலவினம் அதிகரிப்பு, சரிந்து வரும் அந்நாட்டின் வரி வருவாய், அந்நாட்டில் பேரியல் பொருளாதார சீா்திருத்தங்களில் போதிய முன்னேற்றம் இல்லாதது ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அந்நாட்டுக்குக் கடன் அளிப்பது குறித்து இந்தியா மிகுந்த கவலையை வெளிப்படுத்தியது. ராணுவத்துக்கான செலவை அதிகரிக்க இந்தக் கடன் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடும் என்று இந்தியா தெரிவித்தது. இருப்பினும் பாகிஸ்தானுக்கு கடன் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது’ என்று தெரிவித்தன.

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க