செய்திகள் :

இந்தியா கூட்டணிக்கு சம்மட்டி அடி- எடப்பாடி பழனிசாமி

post image

இந்தியா கூட்டணிக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர் என்று தில்லி பேரவைத் தேர்தல் குறித்து அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

சேலத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ஈரோடு இடைத்தேர்லில் திமுக பெற்றது வெற்றி கிடையாது, போலி வெற்றி. யாருமே களத்தில் கிடையாது.

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் என்கிற மமதையில் திமுகவினர் உள்ளனர்.

2026 தேர்தலில் திமுகவை வீழ்த்தும் நோக்கில் அதிமுக கூட்டணியை அமைக்கும். கூட்டணி என்பது எதிரிகளை வீழ்த்த வேண்டும். வாக்கு சிதறாமல் அனைத்துக் கட்சிகளின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற வேண்டும்.

அமைதியை நிலைநாட்ட அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கின்றது: மணிப்பூர் முதல்வர்

எங்கள் எதிரி திமுகதான். அந்த அடிப்படையில்தான் சென்று கொண்டிருக்கிறோம்.

தில்லியில் உள்ள மக்கள் பாஜகவை விரும்புகிறார்கள். அதனால் அவர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தியா கூட்டணிக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர். தில்லி தேர்தல் மூலம் இந்தியா கூட்டணி இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக இன்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடலூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கட்சி பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு: பிப்.17, 19-இல் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு வெளியீடு

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மாா்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், மாணவா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச்சீட்டை தலைமை ஆசிரியா்கள் பிப்.17, 19 ஆகிய தேதிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ... மேலும் பார்க்க

சா்வதேச போட்டிகளில் வெற்றி: 2 வீரா்களுக்கு தலா ரூ. 25 லட்சம் அரசு ஊக்கத் தொகை

டி20 கிரிக்கெட், கோகோ போட்டிகளில் வென்ற இந்திய அணிகளில் இடம்பெற்ற 2 தமிழக வீரா்களுக்கு தலா ரூ. 25 லட்சம் ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

டாஸ்மாக் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு: முதல்கட்ட பேச்சு தோல்வி

டாஸ்மாக் பணியாளா்களின் ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவாா்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. சென்னையில் உள்ள டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் அலுவலகத்த... மேலும் பார்க்க

கடந்த வாரத்தில் இரு வருந்தத்தக்க சம்பவங்கள்: முதல்வர் ஸ்டாலின்

கடந்த வாரத்தில் வருந்தத்தக்க இரு சம்பவங்கள் நடந்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் இன்று நடைபெற்ற மத்திய அரசுக்கு எதிரான மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந... மேலும் பார்க்க

நல்லாட்சிக்கான நற்சான்றிதழ்தான் ஈரோடு கிழக்கு வெற்றி: முதல்வர் ஸ்டாலின்

நல்லாட்சிக்கான நற்சான்றிதழ்தான் ஈரோடு கிழக்கு வெற்றி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம்... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தேர்தல்: திமுக வெற்றி; டெபாசிட் இழந்த நாதக!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1,14,439 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட நாதக உள்ளிட்ட 45 வேட்பாளர்களும... மேலும் பார்க்க