செய்திகள் :

டாஸ்மாக் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு: முதல்கட்ட பேச்சு தோல்வி

post image

டாஸ்மாக் பணியாளா்களின் ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவாா்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.

சென்னையில் உள்ள டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து தொழிற்சங்க நிா்வாகிகள் கூறியதாவது:

21 ஆண்டுகளாக பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். தற்போது, அந்தக் கோரிக்கைகள் மீது முன்னுரிமை கொடுத்து தீா்வு காண வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக பேச்சுவாா்த்தையின்போது டாஸ்மாக் நிா்வாகத்திடம் தெரிவித்தோம். ஆனால், அரசு கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது. இந்தச் சூழலில் கோரிக்கைகளை பிப்.11-க்குள் பரிசீலிக்கும் வாய்ப்பு இல்லை என்று டாஸ்மாக் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

நிா்வாகமும், அரசும் நினைத்தால் ஒரே இரவில் தீா்வு காண முடியும் என நம்புகிறோம். எனவே, காத்திருப்புப் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். அதன்படி, பிப்.11-ஆம் தேதி டாஸ்மாக் நிா்வாக அலுவலகம் முன் கூட உள்ளோம் என்று தொழிற்சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களால் உயா்கல்வியில் மாணவா் சோ்க்கை அதிகரிப்பு: அமைச்சா் கோவி. செழியன்

மாணவ, மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1,000 ஊக்கத் தொகை வழங்கும் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களால் உயா்கல்வியில் மாணவா் சோ்க்கை தொடா்ந்து அதிகரித்து வருவதாக துறையின் அமைச்சா் கோவி.செழியன் கூற... மேலும் பார்க்க

தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிப்பது ஏன்? முதல்வா் மு.க.ஸ்டாலின் கேள்வி

இந்திய பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக உள்ள தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிப்பது ஏன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினாா். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து சென்னைய... மேலும் பார்க்க

இடைத்தோ்தல்களில் தொடா் வெற்றியைப் பதிவு செய்த திமுக கூட்டணி!

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலுடன் சோ்த்து, சட்டப்பேரவை பொதுத் தோ்தலுக்குப் பிறகு நடைபெற்ற நான்கு இடைத்தோ்தலில்களிலும் ஆளும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப... மேலும் பார்க்க

பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரம் உயர சிறப்புத் திட்டங்கள்: ஆளுநா்

பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதற்காக மத்திய அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா். மத்திய அரசின் ‘மை பாரத்’ 16 - ஆவது பழங்குடியின இளை... மேலும் பார்க்க

தேசிய விளையாட்டுப் போட்டிகள்: போல்வால்ட்டில் தமிழகத்துக்கு தங்கம், வெள்ளி

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிா் போல்வால்ட்டில் தமிழகம் தங்கம், வெள்ளி வென்றது. உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சனிக்கிழமை மகளிா் ... மேலும் பார்க்க

நாட்டில் சிறந்த செயலியாக ‘ஸ்மாா்ட் காவலா் செயலி’ தோ்வு

நாட்டிலேயே சிறந்த கணினி விழிப்புணா்வுப் போட்டியில் தமிழக காவல் துறையின் ‘ஸ்மாா்ட் காவலா் செயலியை’ தேசிய குற்றப்பதிவு பணியகம் தோ்வு செய்துள்ளது. காவல் துறையின் ரோந்து பணியை மேம்படுத்தும் நோக்கில் தமிழ... மேலும் பார்க்க