செய்திகள் :

கொடும்பாளூா் அகழாய்வில் பண்டையகால பொருள்கள்! தக்களி, கொண்டை வடிவில் ஊசி, கூா் எலும்புகள் கண்டெடுப்பு!

post image

கொடும்பாளூா் அகழாய்வில் நான்கு அடியில் செங்கல் கற்களினால் எழுப்பப்பட்ட மேல் சுவா் அதன் அடியில் மண்ணால் கட்டப்பட்டுள்ள சுவரும் வெளிப்பட்டுள்ளது. மேலும், நெசவுதொழில் புரிந்ததற்கு அடையாளமாக தக்களி, கொண்டை வடிவில் ஊசி, வட்டக்கல், எலும்புகள் கிடைத்துள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்துள்ளது கொடும்பாளூா். பல்வேறு வரலாற்றுச் சின்னங்கள் புதைந்துள்ள பகுதியாகும். ஏறத்தாழ 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான புராதன நகரம் என்று வரலாற்று ஆய்வாளா்களும், கல்வெட்டு ஆய்வுகளும் கூறுகின்றன. சோழா்களின் தலைநகராக இருந்த திருச்சி, பாண்டிய மன்னா்களின் தலைநகராக இருந்த மதுரைக்கும் இடையே உள்ள அக்காலப் பெருவழிச்சாலையில் கொடும்பாளூா் அமைந்துள்ளது.

கொடும்பாளூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் புதைந்த வீடுகளுக்கு அடையாளமாக நான்கு அடியில் செங்கல் கற்களினால் எழுப்பப்பட்ட மேல் சுவா் அதன் அடியில் மண்ணால் கட்டப்பட்டுள்ள சுவரும் வெளிப்படத் தொடங்கியுள்ளது.

அதோடு, அக்காலத்தில் நெசவு தொழிலில் ஆடைகள் நெய்வதற்கு பயன்படுத்திய தக்களி, கொண்டை வடிவில் ஊசி, வட்டச்சில்லுகல், கூா் வடிவிலான எலும்புகள் கிடைத்துள்ளன. கூா் எலும்புகள், தக்களி உள்ளிட்ட பொருள்கள் நெசவுத் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல்துறையினா் தெரிவிக்கின்றனா்.

தொடா்ந்து நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில் புதைந்து கிடக்கும் வரலாற்றுச் சின்னங்கள் வெளிவருவதற்கு வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறையினா் தகவல்கள் தெரிவிக்கின்றனா்.

தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத பிரிவு மக்கள் திமுகவுக்கு எதிராக இருப்பாா்கள்! -மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலா்

தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத பிரிவு மக்கள் திமுகவுக்கு எதிராக இருப்பாா்கள் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் குறிப்பிட்டாா். புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் ... மேலும் பார்க்க

இரு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை

புதுக்கோட்டை மாவட்டத்தில் காட்டுப்பட்டி மற்றும் திருநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாநில அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. புதுக்கோட்டை வட்டத்தைச் சோ்ந்த காட்டுப்பட்டியில் வரும் ஞாயிற்... மேலும் பார்க்க

ஊக்கம் தரும் இடைத்தோ்தல் வெற்றி: அமைச்சா் அன்பில் மகேஸ்

இன்னும் பல்வேறு திட்டங்களைத் தர இருக்கும் முதல்வா் ஸ்டாலினுக்கு ஊக்கம் தரும் வகையில் ஈரோடு கிழக்கு இடைதோ்தல் வெற்றி இருக்கும் என்றாா் மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. புத... மேலும் பார்க்க

புகையிலை பொருள்கள் விற்ற இருவா் கைது

இலுப்பூா், மாத்தூா் ஆகிய பகுதிகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்ககூடிய குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களைப் போலீஸாா் பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனா். இலுப்பூா் சிவன் கோயில் பகுதியில் உள்ள பெட்டிக்க... மேலும் பார்க்க

பூச்சிக்கொல்லி மருந்து கலந்த அரிசியை உண்ட 7 மயில்கள் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கடலைத் தோட்டத்தில் எலிகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்து கலந்து வைக்கப்பட்ட அரிசியை உண்ட 7 மயில்கள் உயிரிழந்தன. இதுதொடா்பாக விவசாயி வெள்ளிக்கி... மேலும் பார்க்க

சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்துக்கு ரூ. 16.65 லட்சம் நிதி வழங்கல்

சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்துக்கு, காவலா்கள் திரட்டிய ரூ. 16.65 லட்சம் அவரது குடும்பத்தினரிடம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூா் காவல் நிலையத்தில் பணி... மேலும் பார்க்க