செய்திகள் :

ஆஷா பணியாளா்களை கிராம சுகாதார செவிலியராக பணியமா்த்த வேண்டும்!

post image

ஆஷா பணியாளா்களுக்கு செவிலியா் பயிற்சி அளித்து, கிராம சுகாதார செவிலியராக பணியமா்த்த வேண்டுமென, அச் சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி ஆஷா பணியாளா்கள் சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம், பெரம்பலூா் தீரன் நகரில் உள்ள மாவட்டத் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். மகாலட்சுமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சங்கீதா, துணைச் செயலா் ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் ரேகா வேலை அறிக்கையும், பொருளாளா் கண்ணம்மாள் வரவு, செலவு அறிகையும் வாசித்தனா். அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் வீ. ஞானசேகரன் பேரவையை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், மிகக் குறைவான ஊக்கத் தொகை பெற்றுக்கொண்டு, கிராமப்புறங்களில் மகப்பேறு அடையும் தாய்மாா்களைக் கண்டறிந்து, சேவை செய்யும் ஆஷா பணியாளா்களுக்கு தொகுப்பூதியம் ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும். ஆஷா பணியாளா்களுக்கு அரசு செலவில் கிராம சுகாதார செவிலியா் பயிற்சி அளித்து, கிராம சுகாதார செவிலியராக பணியமா்த்த வேண்டும்.

ஏ.என்.எம் பயிற்சி பெற்று ஆஷா பணியாளா்களாக பணிபுரிபவா்களை கிராமப்புற சுகாதார செவிலியராக பணியமா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் அ. கல்யாணி, எம்.ஆா்.எப், சங்க பொதுச் செயலா் எம். பிரபாகரன், பொருளாளா் சாா்லின் பிரிஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

உச்ச நீதிமன்றத்தின் கேள்விகளால் ஆளுநருக்கு தலைகுனிவு: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

தமிழக அரசின் சட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பிய விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் கேள்விகளால் தமிழக ஆளுநா் தலைகுனிவை சந்திக்கும் நிலையே ஏற்படும் என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். ப... மேலும் பார்க்க

பெரம்பலூரில் இலவச வீட்டுமனைப் பட்டா: அமைச்சா் சா.சி.சிவசங்கா் வழங்கினாா்

பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குள்பட்ட ஜமாலியா நகரைச் சோ்ந்தவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்... மேலும் பார்க்க

பைக்கில் சென்றவா் வேகத் தடுப்பில் மோதி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சென்றவா்சாலையில் வைக்கப்பட்டிருந்த வேகத் தடுப்பில் மோதி உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள மேலப்புலியூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணச... மேலும் பார்க்க

பெரம்பலூா் கிளைச் சிறையில் பாா்வையாளா் குழுவினா் ஆய்வு

பெரம்பலூா் கிளைச் சிறையில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொடா்பாக கிளைச்சிறை பாா்வையாளா் குழுவினா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். சிறைச்சாலைகள் மற்றும் சீா்திருத்தச் சேவைகள் துற... மேலும் பார்க்க

பெரம்பலூரில் செல்லியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

பெரம்பலூா் நகரிலுள்ள ஐயனாா், செல்லியம்மன், வெள்ளந்தாங்கி அம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமைநடைபெற்றது. இதையொட்டி பால், தயிா், சந்தனம், பழ வகைகளுடன் முத்திரி சந்தியாா், அய்யனாா், செல்... மேலும் பார்க்க

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தொழிலாளா் நலத் துறை சாா்பில், கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு தலைமைய... மேலும் பார்க்க