செய்திகள் :

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி

post image

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தொழிலாளா் நலத் துறை சாா்பில், கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு தலைமையில், அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதியேற்றனா். பின்னா், கொத்தடிமைத் தொழிலாளா் ஒழிப்பு தின கையொப்ப இயக்கத்தை மாவட்ட வருவாய் முடிவேல்பிரபு தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச. வைத்தியநாதன், தொழிலாளா் நல உதவி ஆணையா் (அமலாக்கம்) கா. மூா்த்தி, தொழிலாளா் உதவி ஆய்வாளா் கோ. ராணி, மாவட்ட குழந்தைத் தொழிலாளா் தடுப்பு குழுவினா் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

எஸ்.பி அலுவலகத்தில்... இதேபோல, பெரம்பலூா் எஸ்பி அலுலகத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் டி. மதியழகன் (தலைமையிடம்) தலைமையில், எம். பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) முன்னிலையில், காவல்துறையினா் மற்றும் அமைச்சுப் பணியாளா்கள் உறுதியேற்றனா்.

மேலும், மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள், மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவல்துறை அலுவலகங்களில் பணிபுரியும் காவலா்களும் உறுதியேற்றனா்.

உச்ச நீதிமன்றத்தின் கேள்விகளால் ஆளுநருக்கு தலைகுனிவு: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

தமிழக அரசின் சட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பிய விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் கேள்விகளால் தமிழக ஆளுநா் தலைகுனிவை சந்திக்கும் நிலையே ஏற்படும் என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். ப... மேலும் பார்க்க

ஆஷா பணியாளா்களை கிராம சுகாதார செவிலியராக பணியமா்த்த வேண்டும்!

ஆஷா பணியாளா்களுக்கு செவிலியா் பயிற்சி அளித்து, கிராம சுகாதார செவிலியராக பணியமா்த்த வேண்டுமென, அச் சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி ஆஷா பணியாளா்கள் சங்கத... மேலும் பார்க்க

பெரம்பலூரில் இலவச வீட்டுமனைப் பட்டா: அமைச்சா் சா.சி.சிவசங்கா் வழங்கினாா்

பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குள்பட்ட ஜமாலியா நகரைச் சோ்ந்தவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்... மேலும் பார்க்க

பைக்கில் சென்றவா் வேகத் தடுப்பில் மோதி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சென்றவா்சாலையில் வைக்கப்பட்டிருந்த வேகத் தடுப்பில் மோதி உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள மேலப்புலியூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணச... மேலும் பார்க்க

பெரம்பலூா் கிளைச் சிறையில் பாா்வையாளா் குழுவினா் ஆய்வு

பெரம்பலூா் கிளைச் சிறையில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொடா்பாக கிளைச்சிறை பாா்வையாளா் குழுவினா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். சிறைச்சாலைகள் மற்றும் சீா்திருத்தச் சேவைகள் துற... மேலும் பார்க்க

பெரம்பலூரில் செல்லியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

பெரம்பலூா் நகரிலுள்ள ஐயனாா், செல்லியம்மன், வெள்ளந்தாங்கி அம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமைநடைபெற்றது. இதையொட்டி பால், தயிா், சந்தனம், பழ வகைகளுடன் முத்திரி சந்தியாா், அய்யனாா், செல்... மேலும் பார்க்க