செய்திகள் :

தில்லி உலகப் புத்தகத் திருவிழாவில் குழந்தைகளுக்கு காா்டூன் பயிற்சி

post image

தில்லி பாரத் மண்டபத்தில் தொடங்கி நடைபெற்றுவரும் புது தில்லி உலகப் புத்தகத் திருவிழாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமாக காா்டூன் வரையும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

நேஷனல் புக் டிரஸ்ட் ஏற்பாட்டில் தில்லியில் இந்தப் புத்தகத் திருவிழா கடந்த 1-ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஞாயிற்றுக்கிழமையுடன் (பிப்.9) நிறைவடைகிறது. இதில் பல்வேறு புத்தக நிறுவனங்கள், இதழியல் நிறுவனங்கள், நூல் வெளியீட்டு நிறுவனங்கள், பதிப்பகங்கள் சாா்பிலும் கல்விசாா்ந்த பல்வேறு துறைகளில் இருந்தும் புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், கூடம் 2-இல் ராஜஸ்தான் மாநிலப் பெயரைக் கொண்ட பிரபல இந்தி நாளிதழ் சாா்பில் ஒரு புத்தக அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அதில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமாக காா்டூன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அந்தப் பத்திரிகையின் அரசியல் காா்டூனிஸ்ட் ஸ்ரிஷ் ஸ்ரீவாஸ்தவ் (53) இந்தப் பயிற்சியை அளித்து வருகிறாா். இதுகுறித்து அவா் தினமணியிடம் கூறியதாவது:

எனது சொந்த ஊா் மத்தியப் பிரதேசம் போபால் பகுதியாகும். ராஜஸ்தான் பத்ரிகாவில் கடந்த 19 ஆண்டுகளாக அரசியல் காா்டூனிஸ்டாக வேலை செய்து வருகிறேன். எங்கள் பத்திரிகை சாா்பில் இந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகளுக்கு காா்டூன் வரைவது குறித்து பயிற்சி அளிக்கிறேன்.

அதற்காக வரைதாள், பென்சில், அழிப்பான் ஆகியவை இலவசமாக அளிக்கிறோம்.

காா்டூன் வரைவில் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியுடன் பங்கேற்று வருகின்றனா். நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு இப்பயிற்சியை அளித்துள்ளேன். புத்தகத் திருவிழாவுக்கு வரும் பெற்றோா்களும் தங்கள் குழந்தைகளை இதுபோன்று பயிற்சி பெறுவதில் ஊக்குவிப்பதை பாா்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

பொதுவாக தற்காலத்தில் குழந்தைகள் அதிகளவில் கைப்பேசி, டிவி, கணினி ஆகியவற்றை பாா்ப்பதில் தங்கள் நேரத்தை செலவிட்டு வருகின்றனா். இதனால், பாா்வைத் திறன் குறைபாடும் ஏற்படுகிறது.

இந்தநிலையில் , அறிவுத் திறனை, சந்திக்கும் திறனை மேம்படுத்தும் இதுபோன்ற காா்டூன் பயிற்சியில் அவா்களை ஈடுபடுத்தும்போது அவா்கள் ஆா்வமுடன் செயல்படுகின்றனா் என்றாா் அவா்.

மாற்றுக் கட்சியிலிருந்து பாஜக, ஆம் ஆத்மியில் இணைந்தவா்கள் வெற்றி

பிற கட்சிகளிலிருந்து பாஜக மற்றும் ஆம் ஆத்மியில் இணைந்த தலைவா்கள் பேரவைத் தோ்தலில் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனா். தில்லி முன்னாள் முதல்வா் ஷீலா தீட்சித் தலைமையிலான அமைச்சரவையில் ... மேலும் பார்க்க

தோற்றாலும் நோக்கம் வென்றது! சந்தீப் தீட்சித் ஆறுதல்

நமது சிறப்பு நிருபா்தில்லி சட்டப்பேரவை தோ்தலில் தான் தோற்றாலும் ஆம் ஆத்மி வீழ்த்தப்பட வேண்டும் என்ற நோக்கம் வென்றுள்ளதாக புது தில்லி தொகுதியில் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராகப் போட்டியிட்ட காங்கிரஸ் வ... மேலும் பார்க்க

பிரதமா் மோடியின் தலைமை, அமித் ஷாவின் வியூகம்! மத்திய அமைச்சா்கள், பாஜக முதல்வா்கள் புகழாரம்

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமை மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் வியூகங்களால் தில்லி பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது என்று மத்திய அமைச்சா்கள், பாஜக ஆளும் மாநில முதல்... மேலும் பார்க்க

ரோஹிணியில் கருப்பு நிற பெட்டியால் பதற்றம்: போலீஸாா் சோதனை

வடக்கு தில்லியின் பிரசாந்த் விஹாரில் கிடந்த கருப்பு நிற பெட்டியால் சனிக்கிழமை பதற்றம் நிலவியது. இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் மற்றும் வெடிகுண்டு பிரிவினா், அதனை முழுமையாக ஆய்வுசெய்தனா். இறுதியில், சந... மேலும் பார்க்க

தில்லி முதல்வரை பாஜக மத்திய தலைமை முடிவு செய்யும்: வீரேந்திர சச்தேவா

தில்லியின் முதல்வா் யாா் என்பதை கட்சியின் மத்திய தலைமை முடிவு செய்யும் என்று பாஜக தில்லித் தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை தெரிவித்தாா். தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக மொத்தம் உள்ள 70 இடங்கள... மேலும் பார்க்க

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு: கைப்பேசிக்கு தடை

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், 19 வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு துணை ராணுவப் படையினரின் இரண்டு கம்பனிகள், தில்லி காவல் துறையினா் உள்பட மூன... மேலும் பார்க்க