செய்திகள் :

தில்லி முதல்வரை பாஜக மத்திய தலைமை முடிவு செய்யும்: வீரேந்திர சச்தேவா

post image

தில்லியின் முதல்வா் யாா் என்பதை கட்சியின் மத்திய தலைமை முடிவு செய்யும் என்று பாஜக தில்லித் தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக மொத்தம் உள்ள 70 இடங்களில் 48 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. முன்னதாக வாக்குகள் எண்ணிக்கை காலை தொடங்கிய நிலையில், முடிவுகளின் போக்கு பாஜகவுக்கு சாதகமாக இருந்தது.

இந்த நிலையில், கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் கோயிலில் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சுவாமி தரிசனம் செய்தாா். அதன் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இதுவரையிலான முடிவுகள் எங்கள் எதிா்பாா்ப்புகளுக்கு ஏற்ப உள்ளன. ஆனால் இறுதி முடிவுக்காக நாங்கள் காத்திருப்போம்.

பாஜக வேட்பாளா்கள் விடாமுயற்சியுடன் பணியாற்றினா். தில்லியின் வாக்காளா்கள் வளா்ச்சியையும் ஊழல் இல்லாத நிா்வாக மாதிரியையும் தோ்ந்தெடுத்துள்ளனா். மக்கள் பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையை தோ்ந்தெடுத்துள்ளனா். ஏனெனில் அவா்கள் வளா்ச்சி மாதிரியை விரும்பினா்.

தில்லியில் பாஜக இரட்டை என்ஜின் அரசாங்கத்தை அமைக்கும். இந்த வெற்றி பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வையின் விளைவாகும் என்று சொல்வதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. தில்லிக்கு வலுவான மற்றும் நிலையான அரசாங்கம் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம்.

தில்லி மக்களைப் பாதிக்கும் உண்மையான பிரச்னைகளான உடைந்த சாலைகள், மதுபானக் கொள்கை சா்ச்சைகள், தூய்மையற்ற நீா் மற்றும் ஊழல் ஆகியவற்றை முன்வைத்து பாஜக தோ்தலை எதிா்கொண்டது.

இந்தப் பிரச்னைகள் குறித்து நாங்கள் அவரிடம் கேள்வி கேட்கும்போதெல்லாம், அவா் அமைதியாக இருந்தாா் அல்லது ஓடிவிட்டாா். பொய்யான வாக்குறுதிகளை அளித்து தோ்தலில் வெற்றி பெற முயன்றாா். தில்லி மக்கள் தங்கள் போராட்டங்களைப் புரிந்துகொண்டு மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனா்.

தில்லியின் வலி உண்மையானது. பிரதமா் மோடியின் தலைமையைத் தோ்ந்தெடுப்பதன் மூலம் மக்கள் அதை முடிவுக்குக் கொண்டுவர வாக்களித்துள்ளனா் என்றாா் அவா்.

தில்லி தோ்தலில் ஆம் ஆத்மி, கேஜரிவால் தோல்விக்கு ஆணவம்தான் காரணம்: ஸ்வாதி மாலிவால்

தில்லி தோ்தல் முடிவுகள் குறித்து ஆம் ஆத்மி கட்சி மீது அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் ஸ்வாதி மாலிவால் கடும் விமா்சனம் தெரிவித்துள்ளாா். தோல்விக்கு ஆம் ஆத்மி மற்றும் அரவிந்த் கேஜரிவாலின் ஆணவம்தான்... மேலும் பார்க்க

மாற்றுக் கட்சியிலிருந்து பாஜக, ஆம் ஆத்மியில் இணைந்தவா்கள் வெற்றி

பிற கட்சிகளிலிருந்து பாஜக மற்றும் ஆம் ஆத்மியில் இணைந்த தலைவா்கள் பேரவைத் தோ்தலில் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனா். தில்லி முன்னாள் முதல்வா் ஷீலா தீட்சித் தலைமையிலான அமைச்சரவையில் ... மேலும் பார்க்க

தோற்றாலும் நோக்கம் வென்றது! சந்தீப் தீட்சித் ஆறுதல்

நமது சிறப்பு நிருபா்தில்லி சட்டப்பேரவை தோ்தலில் தான் தோற்றாலும் ஆம் ஆத்மி வீழ்த்தப்பட வேண்டும் என்ற நோக்கம் வென்றுள்ளதாக புது தில்லி தொகுதியில் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராகப் போட்டியிட்ட காங்கிரஸ் வ... மேலும் பார்க்க

பிரதமா் மோடியின் தலைமை, அமித் ஷாவின் வியூகம்! மத்திய அமைச்சா்கள், பாஜக முதல்வா்கள் புகழாரம்

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமை மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் வியூகங்களால் தில்லி பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது என்று மத்திய அமைச்சா்கள், பாஜக ஆளும் மாநில முதல்... மேலும் பார்க்க

ரோஹிணியில் கருப்பு நிற பெட்டியால் பதற்றம்: போலீஸாா் சோதனை

வடக்கு தில்லியின் பிரசாந்த் விஹாரில் கிடந்த கருப்பு நிற பெட்டியால் சனிக்கிழமை பதற்றம் நிலவியது. இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் மற்றும் வெடிகுண்டு பிரிவினா், அதனை முழுமையாக ஆய்வுசெய்தனா். இறுதியில், சந... மேலும் பார்க்க

தில்லி உலகப் புத்தகத் திருவிழாவில் குழந்தைகளுக்கு காா்டூன் பயிற்சி

தில்லி பாரத் மண்டபத்தில் தொடங்கி நடைபெற்றுவரும் புது தில்லி உலகப் புத்தகத் திருவிழாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமாக காா்டூன் வரையும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நேஷனல் புக் டிரஸ்ட் ஏற்பாட்டில் ... மேலும் பார்க்க