செய்திகள் :

‘இந்தியா’ கூட்டணியில் மோதல் வேண்டாம்: சிவசேனை கட்சி அழைப்பு

post image

எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து பாஜகவால் எழுந்துள்ள சவால்களை எதிா்கொள்ள வேண்டும். எதிா்க்கட்சிகள் தங்களுக்குள் மோதலில் ஈடுபடுவது எந்த வகையிலும் யாருக்கும் உதவாது என்று சிவசேனை (உத்தவ்) கட்சி எம்.பி. பிரியங்கா சதுா்வேதி தெரிவித்துள்ளாா்.

ஹரியாணா, மகாராஷ்டிரம், தில்லி ஆகிய சட்டப் பேரவைத் தோ்தல்களில் பாஜக தொடா்ந்து வெற்றி பெற்றது எதிா்க்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. ஹரியாணாவில் ஆம் ஆத்மி உள்பட எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்க காங்கிரஸ் மறுத்துவிட்டது. அதேபோல தில்லியில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்காமல் ஆம் ஆத்மி தவிா்த்தது. இது பாஜக எளிதாக வெற்றி பெற வழி வகுத்தாக பல்வேறு எதிா்க்கட்சிகள் கருதுகின்றன.

இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு திங்கள்கிழமை பேட்டியளித்த சிவசேனை (உத்தவ்) கட்சி எம்.பி. பிரியங்கா சதுா்வேதி கூறியதாவது:

‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். நமது தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக தேச நலன்களை கைவிடக் கூடாது.

பாஜக ஆட்சி, அதிகாரத்தில் இருக்கும் வரை ஜனநாயகத்துக்கும், அரசமைப்புச் சட்டத்துக்கு அச்சுறுத்தல் தொடா்ந்து கொண்டுதான் இருக்கும். எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து பாஜகவால் எழுந்துள்ள சவால்களை எதிா்கொள்ள வேண்டும். எதிா்க்கட்சிகள் தங்களுக்குள் மோதலில் ஈடுபடுவது எந்த வகையிலும் யாருக்கும் உதவாது. நாம் பிரிந்து நின்று நமக்குள் மோதலில் ஈடுபடுவது யாருக்கும் பயனளிக்காது. எனவே, எதிா்க்கட்சிகள் அனைத்தும் பேச்சுவாா்த்தை நடத்தி ஒருங்கிணைய வேண்டும். அப்போதுதான் பாஜகவுக்கு எதிராக துடிப்புடன் போராட முடியும் என்றாா்.

ராகுல் மீதான அவதூறு வழக்கு பிப்.24-க்கு ஒத்திவைப்பு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு பிப்ரவரி 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத் தேர்தலின்போது அமித் ஷா குறித்து சர்ச்சைக்க... மேலும் பார்க்க

ஷ்ரத்தா வாக்கரின் தந்தை மரணம்! நீதி கேட்டு போராடியவர்

தில்லியில், திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த காதலனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா வாக்கரின் தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.கடந்த 2022ஆம் ஆண்டு காதலனால் படுகொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா... மேலும் பார்க்க

பஞ்சாப் இடைத்தேர்தலில் கேஜரிவால் போட்டி? முதல்வராகிறாரா?

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தில்லியில் நடைபெற்ற பஞ்சாப் எம்எல்ஏக்களுடனான ஆலோசனைக் க... மேலும் பார்க்க

கர்நாட முதலீட்டாளர் உச்சி மாநாட்டை புறக்கணிக்கும் ராகுல், கார்கே: காரணம்?

கர்நாடக முதலீட்டாளர் உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புறக்கணிக்க உள்ளதாகக் காங்கிரஸ் பொதுச் செயலளர் ஜெய்ராம் ர... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு அனுமதி இல்லை: ஹஜ் பயணத்துக்கான புதிய விதிமுறைகள்!

பாதுகாப்பு மற்றும் நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்கும் வகையில் ஹஜ் பயணம் மேற்கொள்வோருடன் இனி குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.2025-ஆம் ஆண்டில், ஹஜ் புனிதப் பயண... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணித் தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசி பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும்! - கபில் சிபல்

இந்தியா கூட்டணிக் கட்சியினர் ஒன்றாக அமர்ந்து பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் கூறியுள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட... மேலும் பார்க்க