செய்திகள் :

இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

post image

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி இன்று(வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார்.

நாட்டில் இரண்டாவது உயரிய அரசமைப்புப் பதவியான குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு வருகிற செப். 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தோ்தலில், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநரும், தமிழகத்தைச் சோ்ந்த பாஜக மூத்த தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

சி.பி.ராதாகிருஷ்ணனை எதிா்த்து தெலங்கானாவைச் சோ்ந்தவரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான சுதா்சன் ரெட்டி 'இந்தியா கூட்டணி' - எதிா்க்கட்சிகளின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா். நேற்று வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், இந்திய நீதித்துறையின் பெரும் ஆளுமை சுதா்சன் ரெட்டி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறி அவருக்கான ஆதரவைக் கோரினார்.

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று(ஆக. 21) சுதா்சன் ரெட்டி, தேர்தல் ஆணையத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமாஜவாதி எம்.பி. ராம் கோபால் யாதவ், திமுக எம்.பி. திருச்சி சிவா, சிவசேனை (யுபிடி) சஞ்சய் ரௌத் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர்.

தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்தபடி செப். 9-ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

INDIA alliance Vice-Presidential nominee, former Supreme Court Judge B Sudershan Reddy files his nomination

இதையும் படிக்க |தாக்குதல் எதிரொலி: தில்லி முதல்வருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு!

தெரு நாய்கள் விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தெரு நாய்களை அகற்றி காப்பகங்களில் பராமரிக்க வேண்டும் என்று தில்லி மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.அவசர வழக்காக விசாரிக்கக் கோரும் மன... மேலும் பார்க்க

போலி பாலியல் வழக்குகள்: வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொய்யான பாலியல் வழக்குகளை பதிவு செய்த வழக்கறிஞர் ஒருவருக்கு லக்னெள சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ... மேலும் பார்க்க

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்!

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புவியியல் ஆய்வுமையம் கூறியதாவது, காஷ்மீரில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இதுவரை எந்... மேலும் பார்க்க

நாட்டை நிறுவியர்கள் எதிர்பார்த்த இந்தியாவை உறுதிப்படுத்தவே: சுதர்சன் ரெட்டி!

புது தில்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் என்பது வெறும் தனிநபர்களைப் பற்றியது அல்ல. நம் நாட்டை நிறுவியவர்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா என்ற கருத்தை உறுதிப்படுத்துவதற்காக என்று இந்தியா கூட்டணியி... மேலும் பார்க்க

தில்லி பயங்கரம்! ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை! இளைய மகனைத் தேடும் போலீஸ்

தெற்கு தில்லியின் சத்பாரி கார்க் கிராமத்தில், ஒரே குடும்பத்தில் தாய் - தந்தை மகன் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.கொலை செய்யப்பட்ட மூன்று பேரும் கழு... மேலும் பார்க்க

தாக்குதல் எதிரொலி: தில்லி முதல்வருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு!

தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தில்லியில் நேற்று(புதன்கிழமை) காலை முதல்வர் ரேகா குப்தாவின் வீட்டில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டமான... மேலும் பார்க்க