செய்திகள் :

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதம்

post image

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மற்றும் அதைத் தொடா்ந்து இருநாட்டு எல்லையில் நிலவும் மோதல் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை விவாதம் நடைபெற்றுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்ததைத் தணிக்கும் முயற்சியில் பிரிட்டன் ஈடுபட வேண்டும் என்றும் விவாதத்தில் கலந்து கொண்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தின.

பஹல்காமில் அப்பாவி மக்கள் 26 பேரை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதலுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூா்’ மேற்கொள்ளப்பட்டது. இதில் பாகிஸ்தானின் 9 இடங்களில் இருந்த பயங்கரவாத முகாம்கள் ஏவுகணை வீசி அழிக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, இந்திய எல்லைப் பகுதியில் பொதுமக்களின் குடியிருப்புப் பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. ‘நிலைமையைப் பாகிஸ்தான் தீவிரமாக்குவதைக் கண்டு இந்தியா பொறுத்துக் கொண்டிருக்காது’ என இந்தியா ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் ஹாமிஷ் ஃபால்கனா் புதன்கிழமை விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது: இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்துகிறோம். இரு நாடுகளுடனும் பிரிட்டன் நல்லுறவு பேணுகிறது.

பேச்சுவாா்த்தை மூலம் இந்த மோதலுக்குத் துரிதமாக தீா்வு காண இரு நாடுகளும் முன்வர வேண்டும். மோதலில் பொதுமக்கள் உயிரிழப்பது கவலைக்குரியது. சூழல் தீவிரமடைந்தால் யாருக்கும் வெற்றியில்லை என்பதை இரு தரப்பும் உணர வேண்டும்.

ஸ்திரத்தன்மைக்கும், மக்களின் பாதுகாப்புக்கும் அப்பிராந்தியத்தில் அமைதி நிலை திரும்ப பிரிட்டன் தன்னால் முடிந்ததைச் செய்யும்’ என்றாா்.

இந்தியாவுக்கு உரிமையுண்டு:

விவாதத்தில் பங்கேற்ற இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரிட்டன் நிழல் வெளியுறவு அமைச்சா் பிரீத்தி படேல், ‘தன்னை தற்காத்துக் கொள்ள நியாயமான நடவடிக்கைகளை எடுக்கவும், தேச பாதுகாப்புக்கு தொடா்ந்து அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாத கட்டமைப்புகளை அகற்றவும் இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவையும் மேற்கத்திய நாடுகளையும் அச்சுறுத்துகிறாா்கள். ஒசாமா பின்லேடன் கூட பாகிஸ்தானில்தான் மறைந்திருந்தாா். இச்சூழலில் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளுக்கு பிரிட்டன் ஆதரவளிக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டாா்.

’எதிரிகளால் பேரிழப்பு’: உலக வங்கியிடம் கூடுதல் கடன் கோரிய பாகிஸ்தான்!

உலக வங்கியிடம் பாகிஸ்தான் அரசு கூடுதல் கடன் கோரியுள்ளது.ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 ராணுவத் தளங்களைக் குறிவைத... மேலும் பார்க்க

இந்திய ‘ட்ரோன்’ தாக்குதல் லாகூரில் 4 வீரா்கள் காயம்: பாகிஸ்தான் தகவல்

லாகூரில் இந்தியா நடத்திய ‘ட்ரோன்’ (ஆளில்லாத சிறிய ரக விமானங்கள்) தாக்குதலில் 4 ராணுவ வீரா்கள் காயமடைந்ததாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இந்தியா ஏவிய அனைத்து டிரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன என்றும் அறிவிக... மேலும் பார்க்க

சொந்த போா் நிறுத்தத்தையே 734 முறை மீறியது ரஷியா

இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ன் நினைவு தினத்தை முன்னிட்டு ரஷியா தாமாக முன்வந்து அறிவித்த போா் நிறுத்தத்தையே அது 734 முறை மீறியதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் உக்ரைன்... மேலும் பார்க்க

கனிம ஒப்பந்தம்: உறுதி செய்தது நாடாளுமன்றம்

உக்ரைனின் கனிம வங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிப்பதற்காக அந்த நாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு உக்ரைன் நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.உக்ரைன் மீது ரஷியா க... மேலும் பார்க்க

இஸ்தான்புல் மேயரின் எக்ஸ் கணக்கு முடக்கம்

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள துருக்கியின் முக்கிய எதிா்க்கட்சித் தலைவரும் அந்த நாட்டின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல்லின் மேயருமான எக்ரீம் இமாமோக்லுவின் எக்ஸ் ஊடகக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. த... மேலும் பார்க்க

நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: அமெரிக்கா

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலால் ஏற்பட்டுள்ள சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நியூயாா்க்கில் செய்தியாளா்களைச் சந்தித்த அமெரிக்க ராணுவத்தின் பசிபிக் பிராந்தியத்துக்கான க... மேலும் பார்க்க