செய்திகள் :

இந்தியா, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்களுடன் அமெரிக்கா சமரச பேச்சு!

post image

இந்தியா மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர்களுடன் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பது தெரியவந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

ஜம்மு - காஷ்மீரின் சர்வதேச எல்லையில் தொடர்ந்து 6-வது நாளாக இரு நாட்டு வீரர்களும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வருவதால் போர்ப் பதற்றம் நிலவுகிறது.

இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க வெள்ளை மாளிகை விரும்புவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் டாமி புரூஸ் பேசியதாவது:

”இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடம் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மார்கோ, இன்று அல்லது நாளை பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

இந்த விவகாரத்தில் மற்ற நாடுகளின் தலைவர்களும் வெளியுறவு அமைச்சர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வுக்காகவும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட நாங்கள் ஊக்குவிக்கிறோம்.

இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல்களை கண்காணித்து வருகின்றோம். பல மட்டங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுடன் தொடர்பில் இருப்பதால் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படைகளின் தளபதி உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை மாலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனையில், பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கும் முழு சுதந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி அளித்திருப்பது போர்ப் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க : அடுத்த 36 மணிநேரத்துக்குள் தாக்குதலுக்கு இந்தியா திட்டம்: பாகிஸ்தான்

நடுவர்மன்ற உத்தரவுகளை நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: பல்வேறு விவகாரங்களில் நடுவர் மன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவை, நடுவர்மன்றம் மற்றும் தீர்ப்பாயங்கள் சட்டப்பிரிவு 1996-ன் கீழ், நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம் என்று முக்கியத்துவம் வாய்ந்த தீ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் பலியாகியுள்ளனர். கைபர் பக்துன்குவாவிலுள்ள தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அஸாம் வர்ஸாக் சோதனைச் சாவடி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குல்: பலியானவரின் குடும்பத்தினரை சந்தித்த ராகுல்!

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.உத்தரப் பிரதேசம் ரேபரேலி மற்றும் அமேதி மக்களவை தொகுதிக... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: 3 நாள்களில் கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் பலி!

ராஜஸ்தானில் 3 நாள்களில் கள்ளச்சாரயம் குடித்த 8 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அல்வார் மாவட்டத்திலுள்ள பையிண்ட்பூர் மற்றும் கிஷான்பூர் ஆகிய கிராமங்களில் பல காலமாக கள்ளச்சாராயம் விற்கப்பட்... மேலும் பார்க்க

அமேதியில் ராகுல்: ஆயுத தொழிற்சாலையை ஆய்வு செய்தார்!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்தாண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக அமேதிக்கு வருகை தந்து முன்ஷிகஞ்சில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையை ஆய்வு செய்தார். ரேபரேலி, அமேதி தொகுதியில் இரண்டு ந... மேலும் பார்க்க

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க