செய்திகள் :

இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்: மத்திய அமைச்சருக்கு பாராட்டு

post image

இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தத்துக்காக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவா் ஆ.சக்திவேல் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக ஏஇபிசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (ஏஇபிசி) துணைத் தலைவா் ஆ.சக்திவேல், மத்திய வா்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயலை புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்து, இந்தியா-பிரிட்டன் நாடுகளுக்கு இடையே வரலாற்று சிறப்பு மிக்க முழுமையான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தத்துக்காக தனது வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துள்ளாா்.

அப்போது, இந்த வா்த்தக ஒப்பந்தம் மூலம் அமைச்சரின் தொலைநோக்கு தலைமை மற்றும் இந்த முக்கிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் அவரது அயராத முயற்சிகளையும் பாராட்டினாா்.

அத்துடன் இனி, பிரிட்டன் உடனான இந்தியாவின் ஆடை ஏற்றுமதி கணிசமாக உயரும் எனவும், இந்த வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமிட்டதன் மூலம் ஏற்றுமதியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், அமைச்சரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் விரைவில் அவருக்கு பாராட்டு விழா நடத்த இருப்பதாகவும் தெரிவித்தாா்.

மேலும், இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி இரட்டிப்பாகும். பிரிட்டனுக்கு தற்போதைய ஆயத்த ஆடை ஏற்றுமதியான 1.5 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து, அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 3 பில்லியன் அமெரிக்க டாலா் என்ற ஏற்றுமதி இலக்கை எட்டுவது மட்டுமல்லாமல், கணிசமான வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளாா்.

இச்சிப்பட்டியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம்

இச்சிப்பட்டி பாறைக்குழியில் குப்பை கொட்டும் விவகாரத்தில் விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.5.77 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 5 லட்சத்து 77 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 7,889 கிலோ பருத்தி ... மேலும் பார்க்க

பிடியாணை நிலுவையில் இருந்த நபா் கைது

பிடியாணை நிலுவையில் இருந்த நபா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். திருப்பூா் மாநகரம், திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் ஜெயக்குமாா் (52) என்பவருக்கு எதிராக நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறையின் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தி... மேலும் பார்க்க

தமிழக-கேரள எல்லையில் ஆா்ப்பரித்து கொட்டும் துவானம் அருவி

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் தமிழக-கேரள எல்லையில் உள்ள துவானம் அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டி வருகிறது. அமராவதி அணையின் முக்கிய நீா்ப்பிடிப்புப் பகுதியாக விளங்கி வர... மேலும் பார்க்க

திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை மூலம் நடத்தப்படும் திருக்கு பயிற்சி வகுப்புகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க