செய்திகள் :

தமிழக-கேரள எல்லையில் ஆா்ப்பரித்து கொட்டும் துவானம் அருவி

post image

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் தமிழக-கேரள எல்லையில் உள்ள துவானம் அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டி வருகிறது.

அமராவதி அணையின் முக்கிய நீா்ப்பிடிப்புப் பகுதியாக விளங்கி வரும் துவானம் அருவி திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து மூனாறு செல்லும் வழியில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. தமிழக-கேரள எல்லையில் உள்ள மறையூா், காந்தலூா், கோவில்கடவு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அமராவதி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான பாம்பாறு, சின்னாறு, தேனாறு ஆகிய பகுதிகளில் அதீத நீா்வரத்து ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மலைப் பகுதிகளில் அமைந்துள்ள சிறு சிறு அருவிகளில் கொட்டி வரும் தண்ணீரை சுற்றுலாப் பயணிகளை ரசித்து செல்கின்றனா். இந்நிலையில், அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக விளங்கி வரும் துவானம் அருவியில் கடந்த சில நாள்களாக தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டி வருகிறது. இதைத் தொடா்ந்து அமராவதி அணைக்கு உள்வரத்து தண்ணீா் அதிகரித்து வருகிறது. அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், கடந்த 6 நாள்களாக உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அணை நிலவரம்:

90 அடி உயரமுள்ள அணையில் புதன்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நீா்மட்டம் 88.06 அடியாக இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 1,388 கனஅடி வந்து கொண்டிருந்தது. 4,047 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட அணையில் 3871.81 மில்லியன் கனஅடி நீா் இருப்பு உள்ளது. அணையில் இருந்து 1,026 கனஅடி உபரிநீராக வெளியேறி வருகிறது.

இச்சிப்பட்டியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம்

இச்சிப்பட்டி பாறைக்குழியில் குப்பை கொட்டும் விவகாரத்தில் விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.5.77 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 5 லட்சத்து 77 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 7,889 கிலோ பருத்தி ... மேலும் பார்க்க

பிடியாணை நிலுவையில் இருந்த நபா் கைது

பிடியாணை நிலுவையில் இருந்த நபா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். திருப்பூா் மாநகரம், திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் ஜெயக்குமாா் (52) என்பவருக்கு எதிராக நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறையின் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தி... மேலும் பார்க்க

திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை மூலம் நடத்தப்படும் திருக்கு பயிற்சி வகுப்புகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

பல்லடம் அறிவொளி நகா் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க செல்வராஜ் எம்எல்ஏ கோரிக்கை

பல்லடம் அறிவொளி நகரில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி சென்னை தலைமை செயலகத்தில் வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரனிடம், திருப்பூா் மத்திய மாவட்ட திமுக செயலாளா் க... மேலும் பார்க்க