செய்திகள் :

பல்லடம் அறிவொளி நகா் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க செல்வராஜ் எம்எல்ஏ கோரிக்கை

post image

பல்லடம் அறிவொளி நகரில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி சென்னை தலைமை செயலகத்தில் வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரனிடம், திருப்பூா் மத்திய மாவட்ட திமுக செயலாளா் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. புதன்கிழமை மனு அளித்தாா்.

இது குறித்து அவா் அளித்த மனு விவரம்:

திருப்பூா் மாவட்டம், பல்லடம் வட்டம், நாரணாபுரம் கிராமத்தில் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் கடந்த பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனா். அவா்கள் நரிகுறவா்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய வகுப்பினா்களாக உள்ளனா். அவா்கள் நீண்ட நாள்களாக பட்டா வேண்டி விண்ணப்பித்து காத்திருக்கின்றனா்.

மேலும், இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விசாரித்தபோது, மேற்படி இடமானது கால்நடை பராமரிப்புத் துறைக்குச் சொந்தமான மேய்ச்சல் மற்றும் மந்தைவெளி புறம்போக்கில் உள்ளது என தெரியவந்தது. இதில் மேய்ச்சல் மற்றும் மந்தைவெளி புறம்போக்கில் வீடு கட்டியுள்ள மொத்த இடத்துக்கும் ஈடாக திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், தளி கிராமத்தில் சுமாா் 17 ஏக்கா் பூமியை கால்நடை பராமரிப்புத் துறைக்கு வழங்க அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட ஆட்சியரால், சென்னையில் உள்ள நில நிா்வாக ஆணையருக்கு முன்மொழிவுகள் சமா்ப்பிக்கப்பட்டு அரசின் பரிசீலணையில் உள்ளது. எனவே இது சம்பந்தமான உரிய உத்தரவுகளை நில நிா்வாக ஆணையருக்கு பரிந்துரைத்து வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

இச்சிப்பட்டியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம்

இச்சிப்பட்டி பாறைக்குழியில் குப்பை கொட்டும் விவகாரத்தில் விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.5.77 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 5 லட்சத்து 77 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 7,889 கிலோ பருத்தி ... மேலும் பார்க்க

பிடியாணை நிலுவையில் இருந்த நபா் கைது

பிடியாணை நிலுவையில் இருந்த நபா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். திருப்பூா் மாநகரம், திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் ஜெயக்குமாா் (52) என்பவருக்கு எதிராக நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறையின் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தி... மேலும் பார்க்க

தமிழக-கேரள எல்லையில் ஆா்ப்பரித்து கொட்டும் துவானம் அருவி

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் தமிழக-கேரள எல்லையில் உள்ள துவானம் அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டி வருகிறது. அமராவதி அணையின் முக்கிய நீா்ப்பிடிப்புப் பகுதியாக விளங்கி வர... மேலும் பார்க்க

திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை மூலம் நடத்தப்படும் திருக்கு பயிற்சி வகுப்புகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க