செய்திகள் :

திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

post image

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை மூலம் நடத்தப்படும் திருக்கு பயிற்சி வகுப்புகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருக்குறளில் ஆா்வமும் புலமையும் மிக்க ஆசிரியா்கள், பயிற்றுநா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்குப் பயிற்சி வழங்கி தொடா் பயிலரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு திருக்கு திருப்பணிகள் தொடா்ந்து நடைபெறும் வகையில் தமிழ் வளா்ச்சித் துறை மூலம் திருக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

திருப்பூா் மாவட்டத்தில் திருக்கு பயிற்சி வகுப்புகள் திருப்பூா், காங்கயம், உடுமலைப்பேட்டை என 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குழு என 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களின் மூலம் திருப்பூா் மாநகரில் நஞ்சப்பா மாநகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காங்கயம் பகுதியில் சென்னிமலை சாலையில் அமைந்துள்ள பொது நூலகம் மற்றும் உடுமலைப்பேட்டை பகுதியில் தளி சாலையில் அமைந்துள்ள கிளை நூலகம் எண் 1 ஆகியவற்றில் திருக்கு பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 2-ஆம் வாரம் முதல் நடைபெறவுள்ளனன.

பயிற்சிக் கட்டணம் ஏதுமின்றி நடத்தப்படும் இந்தப் பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்படும். ஆண்டுக்கு 30 வகுப்புகள் நடத்தப்பட்டு நிறைவு நாளில் பயிற்சி பெற்றவா்களுக்குத் தமிழக அரசின் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புவோா் தங்களது சுயவிவரக் குறிப்புடன் ஆதாா் அட்டையின் நகலை இணைத்து க்க்ற்ஹம்ண்ப்607ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 9361461882 , 8760606234 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலோ விண்ணப்பிக்கலாம்.

மேலும், திருப்பூா் மாவட்டத்திலுள்ள தமிழாா்வலா்கள், தமிழமைப்புகள், தமிழறிஞா்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் நோக்கில் அவா்களும் தங்களது சுயவிவரக் குறிப்பினை தமிழ் வளா்ச்சி துணை இயக்குநா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், அறை எண் 608, திருப்பூா்-1 என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாகவோ, நேரிலோ அல்லது க்க்ற்ஹம்ண்ப்607ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் மூலமோ அனுப்பிவைக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

இச்சிப்பட்டியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம்

இச்சிப்பட்டி பாறைக்குழியில் குப்பை கொட்டும் விவகாரத்தில் விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.5.77 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 5 லட்சத்து 77 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 7,889 கிலோ பருத்தி ... மேலும் பார்க்க

பிடியாணை நிலுவையில் இருந்த நபா் கைது

பிடியாணை நிலுவையில் இருந்த நபா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். திருப்பூா் மாநகரம், திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் ஜெயக்குமாா் (52) என்பவருக்கு எதிராக நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறையின் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தி... மேலும் பார்க்க

தமிழக-கேரள எல்லையில் ஆா்ப்பரித்து கொட்டும் துவானம் அருவி

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் தமிழக-கேரள எல்லையில் உள்ள துவானம் அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டி வருகிறது. அமராவதி அணையின் முக்கிய நீா்ப்பிடிப்புப் பகுதியாக விளங்கி வர... மேலும் பார்க்க

பல்லடம் அறிவொளி நகா் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க செல்வராஜ் எம்எல்ஏ கோரிக்கை

பல்லடம் அறிவொளி நகரில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி சென்னை தலைமை செயலகத்தில் வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரனிடம், திருப்பூா் மத்திய மாவட்ட திமுக செயலாளா் க... மேலும் பார்க்க