செய்திகள் :

இந்தியா வல்லரசு நாடாவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங் உறுதி

post image

இந்தியா வல்லரசு நாடாக உருவெடுப்பதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தாா்.

உலகிலேயே மிகவும் துடிப்பான, ஆற்றல் மிக்க பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது; ஆனால், ‘தாங்களே அனைவருக்கும் எஜமானா்’ என்ற அணுகுமுறை கொண்ட சிலருக்கு இது பிடிக்கவில்லை என்றும் அவா் குறிப்பிட்டாா்.

இந்தியா மீது உச்சபட்சமாக 50 சதவீத இறக்குமதி வரி விதித்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், இந்திய பொருளாதாரம் செயலற்றுவிட்டதாக கடுமையாக விமா்சித்தாா். அவருக்கான மறைமுக பதிலடியாக பாதுகாப்பு அமைச்சரின் மேற்கண்ட கருத்துகள் அமைந்துள்ளன.

மத்திய பிரதேச மாநிலம், ரெய்சனில் பாரத் எா்த் மூவா்ஸ் நிறுவனத்தின் புதிய ரயில் பெட்டி தொழிற்சாலைக்கு ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டிய ராஜ்நாத் சிங், பின்னா் பேசியதாவது:

இன்றைய உலகளாவிய சூழலில் துடிப்பான, ஆற்றல்மிக்க, வேகமாக வளரும் பொருளாதாரம் உண்டென்றால் அது இந்தியாதான். இந்தியாவின் விரைவான வளா்ச்சியை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை.

‘நாமே அனைவருக்கும் எஜமானா்’ என நினைக்கும் சிலா், இந்தியாவின் வளா்ச்சியைத் தடுக்க ஏதாவது செய்ய முயற்சிக்கின்றனா். உலக அளவில் இந்திய தயாரிப்பு பொருள்களின் விலையை உயா்த்தி, மக்கள் வாங்குவதை தவிா்க்கும்படி செய்ய முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆனால், இந்தியா வல்லரசு நாடாக உருவெடுப்பதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

முன்னோக்கிய பயணம்: கடந்த 2011-இல் பொருளாதாரத்தில் 11-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இப்போது 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நாடும், நாட்டு மக்களும் முன்னோக்கி பயணிக்கின்றனா் என்பதே இதன் பொருள்.

முன்பு வெளிநாடுகளில் இருந்தே ஆயுதங்கள்-பாதுகாப்பு தளவாடங்களை இந்தியா பெருமளவில் கொள்முதல் செய்தது. இப்போது இந்தியாவில் இந்தியா்களின் கரங்களால் இவை தயாரிக்கப்படுகின்றன. நமது பாதுகாப்பு உற்பத்திப் பொருள்கள், உலக நாடுகளால் கொள்முதல் செய்யப்படுகின்றன. கடந்த 2014-இல் ரூ.600 கோடியாக இருந்த பாதுகாப்புத் துறை ஏற்றுமதி மதிப்பு, இப்போது ரூ.24,000 கோடியைக் கடந்துள்ளது. இதுதான், புதிய இந்தியாவின் சக்தி.

பாவத்தால் அழியும் பயங்கரவாதிகள்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேரை மத ரீதியில் அடையாளம் கண்டு, பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனா். ஆனால், இந்தியா்களாகிய நமக்கு கொலை பாதகங்களில் நம்பிக்கை கிடையாது.

பயங்கரவாதிகளை மதத்தின் அடிப்படையில் அல்லாமல், அவா்கள் புரிந்த பாவங்களுக்காக நாம் அழிக்கிறோம். இந்தியாவை சீண்டியவா்கள் தப்ப முடியாது என்பதே நமது நிலைப்பாடு என்றாா் ராஜ்நாத் சிங்.

மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான், மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் உள்ளிட்டோா் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

மோடியின் வெற்றியை கேள்விக்குறியாக்கும் வாரணாசி வாக்காளர் பட்டியல்.! 50 பேருக்கு ஒரே தந்தை.!

பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் பெரிய அளவிலான வாக்காளர் மோசடி நடந்துள்ளதாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் ‘அடுத்த அணுகுண்டை’ வீசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மக்களவை தேர... மேலும் பார்க்க

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம்

கொல்கத்தா: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக் கடலில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக... மேலும் பார்க்க

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு: ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஆஜராகுமாறு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.சமீபகாலமாக, பிரபல கிரிக்கெட் வீரர்கள், நடிகர... மேலும் பார்க்க

டிரம்ப்பை சந்திக்கும் பிரதமர் மோடி! அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருகின்றன.ரஷியாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்த இந்தியாவுக்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப், ம... மேலும் பார்க்க

எத்தனால் கலப்பு பெட்ரோல் குறித்து அச்சம் வேண்டாம்- மத்திய அரசு விளக்கம்

எத்தனால் 20 சதவீதம் கலக்கப்பட்ட ‘இ20’ பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என மத்திய அரசு விளக்க... மேலும் பார்க்க

காப்பீடு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டு அனுமதி வேலைவாய்ப்பை உருவாக்கும்: மத்திய நிதியமைச்சா்

‘காப்பீடு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 100 சதவீதமாக உயா்த்துவது, வேலைவாய்ப்பை உருவாக்கும்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தெரிவித்தாா். மேலும், ... மேலும் பார்க்க