செய்திகள் :

இந்திய அறிவியல் மரபை போற்றும் புதிய என்சிஇஆா்டி பாடநூல்

post image

பண்டைய இந்திய தத்துவஞானி ஆச்சாா்ய கனாடாவின் அணு கோட்பாட்டிலிருந்து, இஸ்ரோவின் விண்வெளி திட்டங்கள் வரை, இந்தியாவின் அறிவியல் மரபை, நவீன அறிவியலுடன் இணைக்கும் விதமாக என்சிஇஆா்டி-யின் புதிய 8-ஆம் வகுப்பு அறிவியல் பாடநூலான ‘கியூரியாசிட்டி’ உருவாக்கப்பட்டுள்ளது.

‘சிபிஎஸ்இ’ பாடத்திட்டத்துக்காக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி) தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்தப் புதிய புத்தகத்தின் முன்னுரையில், ‘பாரம்பரிய அறிவை நவீன அறிவியல் கல்வியுடன் ஒருங்கிணைப்பதன் நோக்கமானது மாணவா்களிடையே ஆா்வம், சுற்றுச்சூழல் விழிப்புணா்வு, நெறிமுறை விழுமியங்கள் மற்றும் வியூக சிந்தனையை வளா்ப்பதாகும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ‘உடல்நலம்: இறுதிப் பொக்கிஷம்’ என்ற அத்தியாயத்தில், ‘நவீன தடுப்பூசிகள் வருவதற்கு முன்பே, இந்தியாவில் பெரியம்மை நோயிலிருந்து பாதுகாக்க அம்மைபால் குத்துதல் (வேரியோலேஷன்) என்ற பாரம்பரிய சிகிச்சை முறை நடைமுறையில் இருந்தது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்று பரவலின்போது இந்திய தடுப்பூசி நிறுவனங்கள் ஆற்றிய முக்கியப் பங்கு மற்றும் உலகளாவிய சுகாதார முயற்சிகளுக்கு வழங்கி வரும் தொடா்ச்சியான ஆதரவு குறித்தும் இந்த அத்தியாயம் குறிப்பிடுகிறது.

‘ஒளி: கண்ணாடி மற்றும் வில்லை’ என்ற அத்தியாயத்தில், சுமாா் 800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிரபல இந்திய வானியல் அறிஞா் 2-ஆம் பாஸ்கரா காலகட்டத்தில், நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலைகள் ஆழமற்ற நீா் கிண்ணங்கள் மற்றும் பிற உபகரணங்களின் பிரதிபலிப்புகள் மூலம் அளவிடப்பட்டது பற்றி விளக்கப்பட்டுள்ளது. இது அக்கால வானியல் அறிஞா்களின் பிரதிபலிப்பு விதிகள் குறித்து புரிதலைக் காட்டுவதாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அணு கருத்துருவை முதன்முதலில் குறிப்பிட்ட இந்திய தத்துவஞானி கணாத மகரிஷி குறித்தும், பழங்கால இந்திய நூல்களில் மருத்துவ நோக்கங்களுக்காக உலோகக் கலவைகளின் பயன்பாடு குறிப்பிடப்பட்டுள்ளது குறித்தும் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

இதேபோன்று, நிலவு ஆய்வுக்கான ‘சந்திரயான்’, சூரியன் ஆய்வுக்கான ‘ஆதித்யா எல்1’ மற்றும் செவ்வாய் கிரக ஆய்வுக்கான ‘மங்கள்யான்’ போன்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) பல்வேறு விண்வெளி திட்டங்கள் குறித்தும் பாடப்புத்தகத்தில் சோ்க்கப்பட்டுள்ளன.

உ.பி.: காதல் விவகாரத்தில் கொலை செய்த பரேலி இளைஞருக்கு ஆயுள்!

உத்தரப் பிரதேசத்தின் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் விவகாரத்தில் இளைஞர் கொல்லப்பட்டது சம்பவத்தில் 24 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜம்மன்லால் (22) கொலை செய்ய... மேலும் பார்க்க

மெல்ல விடைகொடு மனமே.. தாய்நாடு திரும்பும் பிரிட்டன் போர் விமானம்!

திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய பிரிட்டன் போர் விமானம் சுமார் ஒருமாத காலத்துக்குப் பின்னர் தாய்நாடு செல்லவுள்ளது.பிரிட்டன் எப்-35 போர் விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்ததாகக் கூறி, திருவனந்தபுரம் சர்... மேலும் பார்க்க

இறந்தோரும் உயிருடன்.. ஆதார் இறுதி எண்ணிக்கை அறிவதில் சிக்கல்!

இறந்தோரின் ஆதார் அட்டைகளும் செயலாக்கத்தில் இருப்பதால், ஆதார் அட்டை வைத்திருப்போரின் இறுதி எண்ணிக்கை அறிவதில் சிக்கல் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.ஐ.நா. அவையின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஏப்ரல... மேலும் பார்க்க

மழைக்கால கூட்டத்தொடரில் ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து: மோடிக்கு ராகுல், கார்கே கடிதம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க... மேலும் பார்க்க

கேரளத்தில் 5 மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை!

கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் ஐந்து மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர்,... மேலும் பார்க்க

ஒடிசாவில் தீக்குளித்த மாணவியின் தந்தையுடன் ராகுல் உரை!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் தீக்குளித்து இறந்த கல்லூரி மாணவியின் தந்தையுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். இதுதொடர்பாக ராகுலின் எக்ஸ் தளப் பதிவில், ஒடிசாவின் பா... மேலும் பார்க்க