செய்திகள் :

இந்திய ஆயுதப் படைகளை எண்ணி பெருமிதம்: காங்கிரஸ்

post image

இந்திய ஆயுதப் படைகளை எண்ணி பெருமிதம் கொள்வதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா ஆயுதப் படைகள் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டது.

இந்தத் தாக்குதலை தொடா்ந்து ஏற்பட்டுள்ள சூழல் குறித்து விவாதிக்க தில்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவா் காா்கே, அக்கட்சி எம்.பி.க்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ், பொருளாளா் அஜய் மாக்கன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதைத்தொடா்ந்து காா்கே, ராகுல் கூட்டாக செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்திய ஆயுதப் படைகளை எண்ணி காங்கிரஸ் பெருமிதம் கொள்கிறது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையை உறுதி செய்வதில் ஆயுதப் படைகளுக்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும். அந்தப் படைகளுக்கு காங்கிரஸ் முழுமையாக ஆதரவளிக்கிறது. நெஞ்சுரம் மிக்க ஆயுதப் படை வீரா்களுக்கு காங்கிரஸ் தோளோடு தோள் நிற்கும்’ என்று தெரிவித்தனா்.

இதேபோல இந்தியாவின் தாக்குதல் நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை: இந்திய விமானப்படை

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்று இந்திய விமானப் படை விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான ராணுவ நடவடிக்கைகள் இன்னும் ... மேலும் பார்க்க

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கான கதவுகளைத் திறந்துவிட்டோமா? - ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கான கதவுகளை நாம் திறந்துவிட்டோமா என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைக... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாபில் மீண்டும் இயல்புநிலை

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர், பஞ்சாபில் ஞாயிற்றுக்கிழமை காலை இயல்பு நிலை திரும்பியது.பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம்... மேலும் பார்க்க

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், ம... மேலும் பார்க்க

மணிப்பூரில் 11 தீவிரவாதிகள் கைது

மணிப்பூரில் உள்ளூர் மக்களை மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் 11 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இம்பால் மேற்கு, காக்சிங், பிஷ்ணுபூர் மற்றும் தௌபல் மாவட்டங்களில் இருந்து அவர்கள் கைது செய்யப்பட்... மேலும் பார்க்க

மணிப்பூர் காவல் துறையினர் தேடுதல் வேட்டை: ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்

கடந்த 24 மணி நேரத்தில் மணிப்பூர் காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பல்வேறு ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், மணிப்பூர் மாநிலத்தில் மிரட்ட... மேலும் பார்க்க