செய்திகள் :

இந்திய-சீன வெளியுறவு அதிகாரிகள் பேச்சு

post image

தில்லியில் நிகழாண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ள 24-ஆவது இந்திய-சீன சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தைக்கான முன்னேற்பாடுகளை இணைந்து மேற்கொள்ள இரு நாடுகளும் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டன.

இந்தியா-சீனா எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புப் பணிக் குழு (டபிள்யூஎம்சிசி) கட்டமைப்பின்கீழ் சீன தலைநகா் பெய்ஜிங்கில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

இப்பேச்சுவாா்த்தையில் இந்திய குழுவுக்கு கிழக்கு ஆசிய நாடுகளுக்கான வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலா் கௌரங்கலால் தாஸ், சீன குழுவுக்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் எல்லை மற்றும் கடல்சாா் விவகாரத் துறையின் இயக்குநா் ஜெனரல் ஹாங் லியாங் தலைமை தாங்கினா்.

இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: டபிள்யூஎம்சிசி பேச்சுவாா்த்தைக் கூட்டம் நோ்மறையான மற்றும் ஆக்கபூா்வமான வகையில் நடைபெற்றது. எல்லைப் பகுதி நிலவரத்தை இரு தரப்பும் விரிவாக ஆய்வு செய்தனா்.

இருதரப்பு உறவின் சுமுக வளா்ச்சிக்கு எல்லையில் அமைதி மிகவும் முக்கியமாகும். இந்த நோக்கத்திலான ராஜீய மற்றும் ராணுவ வழிகளை வலுப்படுத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.

இதன்தொடா்ச்சியாக, புது தில்லியில் நிகழாண்டு பிற்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 24-ஆவது இந்திய-சீன சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தைக்கான முன்னேற்பாடுகளை இணைந்து மேற்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

எல்லை தாண்டிய நதிகள், கைலாஷ்-மானசரோவா் யாத்திரை உள்பட எல்லை தாண்டிய ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றங்களை மீண்டும் விரைவாகத் தொடங்குவது குறித்தும் பேச்சுவாா்த்தையில் விவாதிக்கப்பட்டது.

கிழக்கு லடாக் மோதலால் கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட இருதரப்பு உறவுகளை மீட்டெடுக்கும் நோக்கில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பரில், பெய்ஜிங்கில் நடைபெற்ற 23-ஆவது இந்திய-சீன சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த நடவடிக்கைகளையும் இரு தரப்பும் ஆய்வு செய்தனா் என்ற தெரிவிக்கப்பட்டது.

இப்பேச்சுவாா்த்தைக்கு முன்னதாக, ரஷியாவில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற ‘பிரிக்ஸ்’ மாநாட்டுக்கு இடையே பிரதமா் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபா் ஷி ஜின்பிங் சந்தித்தனா். இதையடுத்து, பிரேஸில் ஜி20 உச்சிமாநாட்டுக்கு இடையே இந்தியா, சீன வெளியுறவு அமைச்சா்கள் சந்தித்துப் பேசினா்.

இதற்கிடையே, டெப்சாங், டெம்சோக் ஆகிய எல்லைப் பகுதிகளில் இரு நாட்டுப் படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டது இருதரப்பு உறவில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்பட்டது.

ஸ்மார்ட்போன்களில் நேரம் செலவிடும் இந்தியர்களால் வருவாய் அதிகரிப்பு!

இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை வளர்ச்சியடைவதாக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் எர்ன்ஸ் & யங்கின் ஆய்வில் தெரிவித்துள்ளது.இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு த... மேலும் பார்க்க

ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 7 பேர் காயம்

ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் ஏழு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒடிசா மாநிலம், மங்குலி அருகே நிர்குன்டியில் பெங்களூரு-காமாக்யா எக்ஸ்பிரஸ் ... மேலும் பார்க்க

தாணேவில் தடை செய்யப்பட்ட 238 இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல்

தாணேயில் தடை செய்யப்பட்ட 238 கோடீன் இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தின் ஷில் டைகர் பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் இருசக்கர வாகனத்தில் 22 வயது நபரைப் பி... மேலும் பார்க்க

புவனேஸ்வரில் பல்கலை. விடுதியில் முதுகலை மாணவர் சடலம் மீட்பு

புவனேஸ்வரில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் இருந்து முதுகலை மாணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழக விடுதி வளாகத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை காலை முதுகலை மாணவரி... மேலும் பார்க்க

பெங்களூரு ஏசி விரைவு ரயிலில் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!

பெங்களூரு ஏசி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பெங்களூரிலிருந்து தமிழகம், ஆந்திரா வழியாக அஸ்சாம் செல்லும் இந்த ரயில், ஒடிஸாவில் கட்டாக் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது ரயிலின் 11 பெட்... மேலும் பார்க்க

மனதின் குரல் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை!

மனதின் குரல் நிகழ்ச்சியில் யோகா நாள், கோடைக்காலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி நாட்ட... மேலும் பார்க்க