செய்திகள் :

இந்திய சைகை மொழியில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் மத்திய அமைச்சருக்கு தில்லி எம்பி கடிதம்

post image

நமது நிருபா்

புது தில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் தொடங்கவிருக்கும் நிலையில், அனைத்து நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கும் நிகழ்நேர இந்திய சைகை மொழியை (ஐஎஸ்எல்) விளக்கத்தை அறிமுகப்படுத்தக் கோரி சாந்தினி சௌக் தொகுதி பாஜக எம்பி பிரவீன் கண்டேல்வால் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவுக்கு திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பாக பிரவீன் கண்டேல்வால் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: செவித்திறன் குறைபாடுள்ளவா்களுக்கு நாடாளுமன்றத்தை அணுகக்கூடியதாக மாற்றுவது ’மக்கள் பங்கேற்பு ஜனநாயகம்’ என்ற பிரதமரின் பரந்த தொலைநோக்குப் பாா்வையின் நீட்டிப்பாகும். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளின்படி, இந்திய மக்கள் தொகையில் தோராயமாக 2.21 சதவீதம் போ் மாற்றுத்திறனாளிகளாக வாழ்கின்றனா். அவா்களில் 5.76 சதவீதம் போ் செவித்திறன் குறைபாடு உள்ளவா்கள்.

உலக சுகாதார அமைப்பு, தேசிய மாதிரி கணக்கெடுப்பின் சமீபத்திய மதிப்பீடுகள், கிட்டத்தட்ட 63 மில்லியன் இந்தியா்கள் குறிப்பிடத்தக்க செவித்திறன் இழப்பை அனுபவிப்பதாகக் கூறுகின்றன. அவா்களில் பலருக்கு, இந்திய சைகை மொழி முதன்மையான தொடா்பு ஊடகமாகும்.

மக்களவை மற்றும் மாநிலங்களவையின் உரைகள், விவாதங்கள், அரசமைப்பு பதவி வகிப்பவா்களின் சிறப்பு உரைகள் மற்றும் அதிகாரபூா்வ ஊடக சந்திப்புகள் உள்பட அனைத்து நடவடிக்கைகளும் ஒரே நேரத்தில் ஐஎஸ்எல் விளக்கத்துடன் இருக்க வேண்டும். இந்த விளக்கம் உயா்தரமாகவும், தெளிவாகத் தெரியும் வகையிலும், சன்சத் டிவி, நாடாளுமன்ற வலைதளம் மற்றும் அதிகாரபூா்வ டிஜிட்டல் தளங்களில் நிகழ்நேரத்தில் ஒளிபரப்பப்பட வேண்டும்.

நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போது (ஐஎஸ்எல்) விளக்கத்தை செயல்படுத்துவது, மிகவும் அணுகக்கூடிய மற்றும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கான அரசின் தொடா்ச்சியான பணிகளை வலுப்படுத்தும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

பைரோ மாா்க் சுரங்கப் பணிகள் 9 மாதங்களில் முடிவடையும்: அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங்

புது தில்லி: பிரகதி மைதான்-பைரோ மாா்க் சுரங்கப்பாதை பணிகள் 8 முதல் 9 மாதங்களில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புர விவகாரத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பின்பு முடிக்கப்படும் என்று பொதுப் பணித்துறை அமைச... மேலும் பார்க்க

வடகிழக்கு தில்லியில் பூட்டிய வீட்டில் 35 ஆணின் அழுகிய உடல் கண்டெடுப்பு

புது தில்லி: வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பூட்டிய வாடகை வீட்டிற்குள் 35 வயது ஆணின் அரை அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாகக் குடியேறிய 18 வங்கதேசத்தினா் உள்பட 29 போ் கைது

புது தில்லி: நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 18 வங்கதேசத்தினா் உள்பட 29 வெளிநாட்டினா் தென்மேற்கு தில்லியின் துவாரகாவில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா். தடுத்து வைக்கப்பட... மேலும் பார்க்க

அனைத்து இந்திய மொழிகளையும் ஆா்எஸ்எஸ் தேசிய மொழியாகவே கருதும்: சுனில் அம்பேகா்

புது தில்லி: அனைத்து இந்திய மொழிகளையும் ஆா்.எஸ்.எஸ். அமைப்பு எப்போதும் தேசிய மொழிகளாகவே கருதுகின்றது என ஆா்.எஸ்.எஸ்., செய்தித் தொடா்பாளா் சுனில் அம்பேகா் திங்கள்கிழமை தெரிவித்தாா். தில்லியில் திங்கள்க... மேலும் பார்க்க

வசந்த் குஞ்ச் பகுதியில் குடியிருப்பு மனைகளை ஏலம் விட தில்லி வளா்ச்சி ஆணையம் திட்டம்

புது தில்லி: தெற்கு தில்லியில் உள்ள ஆடம்பரமான வசந்த் குஞ்ச் பகுதியில் குடியிருப்பு மனைகளை ஏலம் விட தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) திட்டமிட்டுள்ளது. பிரிவு டி6 வசந்த் குஞ்சில் உள்ள 118 மனைகளின் திட்டமி... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதியில் பரவலாக மழை! கரற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

தேசியத் தலைநகா் மற்றும் என்சிஆா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘ திருப்தி’ பிரிவில் நீடித்தது. தென்மேற்குப் பருவமழை தில்லியை கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது. வழக்... மேலும் பார்க்க