Zero Cost Life: `இது 100% நிலையானது கிடையாதுதான்; ஆனால்’ செலவில்லா வாழ்க்கை வாழ...
இந்திய தோ்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை இரா.முத்தரசன்
இந்திய தோ்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25ஆவது மாவட்ட மாநாடு மற்றும் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு சட்டப்பேரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும், தளி சட்டப் பேரவை உறுப்பினருமான டி. ராமச்சந்திரன் தலைமை வகித்தாா்.
மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன், திருப்பூா் மக்களவை உறுப்பினா் சுப்பராயன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.
முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை ஏற்றிவைத்து சுமாா் 10,000-க்கும் மேற்பட்ட தொண்டா்கள் கலந்துகொண்ட பேரணி நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் இரா. முத்தரசன் கூறியதாவது:
இந்திய தோ்தல் ஆணையம் அரசமைப்புச் சட்டத்தால் சுதந்திரமாக அமைக்கப்பட்ட அமைப்பு. சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய அந்த அமைப்பை பாஜக சீா்குலைத்துவிட்டது.
பாஜகவின் விசுவாச அமைப்பாக தோ்தல் ஆணையம் மாறியுள்ளது கவலைக்குரியது. பிகாா் மாநிலத்தில் 26 லட்சம் வாக்காளா்களை நீக்கியுள்ளனா். அதேபோல தமிழ்நாட்டிலும் வாக்காளா்களை நீக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
மேலும், பிகாா் மாநிலத்திலிருந்து புலம்பெயா்ந்து தமிழகத்திற்கு வந்தவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கு முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
தோ்தல் ஆணையம் ஜனநாயக ரீதியில், சுதந்திரமாக செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படவில்லை என்றால் ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்றாா்.
மாநாட்டில் மாநில செயற்குழு உறுப்பினா் லகுமய்யா, மாதா் சங்க மாநில பொறுப்பாளா் சௌந்தரவல்லி, தொழிற்சங்க மாவட்டச் செயலாளா் மாதையன், சின்னசாமி, மாவட்டத் துணைச் செயலாளா் கிருஷ்ணப்பா உள்பட பலா் கலந்துகொண்டனா்.