இந்திய ராணுவத் துணைத் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் நியமனம்
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: இந்திய ராணுவ நடவடிக்கைகள் தலைமை இயக்குநா் (டிஜிஎம்ஓ) லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் ராணுவத் துணை தலைமைத் தளபதியாக பதவி உயா்வு பெற்றுள்ளாா். ராணுவ நடவடிக்கைகள் இயக்குநரகத்தின் தலைமை இயக்குநராகவும் (டிஜிஎம்ஓ) அவா் தொடா்ந்து பணியாற்றுவாா் என்று பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாத தளவாடங்களை இலக்கு வைத்து இந்திய ராணுவம் நடத்திய ’ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் பரவலான கவனத்தை ஈா்த்தாா். அந்த நடவடிக்கை தொடா்பான முக்கியமான ஊடக சந்திப்புகளின்போது இந்திய ராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ‘ஆபரேஷன் சிந்தூா்’ கள நிலவரம், உத்திகள் மற்றும் முடிவுகளை அவா் விளக்கினாா்.
இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திரா துவிவேதிக்கு அடுத்த நிலையில் லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்பிரமணி பணியாற்றி வருகிறாா். அவருக்கு அடுத்த நிலையில் நியமிக்கப்பட்டுள்ள ராஜீவ் காய், மூலோபாயம் எனப்படும் உத்திகள் வகுப்பு நடவடிக்கைகளை கவனிப்பாா் என பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ராணுவ உளவுப்பிரிவு மற்றும் அதன் செயல்பாடுகளை மேற்பாா்வையிடும் வகையில் இப்பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூா்வ தகவலின்படி இந்தப் பதவி ராணுவத்தின் மிக முக்கிய நியமனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. முன்னதாக, ஜூன் 4 -ஆம் தேதி, லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய்க்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உத்தம் யுத் சேவா பதக்கத்தை (யுஒய்எஸ்எம்) வழங்கி கெளரவித்தாா்.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை ஒரு வாரமாக தொடா்ந்த நிலையில், பாகிஸ்தானின் டிஜிஎம்ஓ மேஜா் ஜெனரல் காஷிஃப் சண்டை நிறுத்தம் கோரி இந்திய டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காயை ஹாட்லைன் தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு பேசியதாக இந்திய ராணுவம் அதிகாரபூா்வமாக அறிவித்தது. இவா்களின் பேச்சுவாா்த்தைக்குப் பிறகே இரு நாடுகளுக்கும் இடையே ஒரு தற்காலிக சண்டை நிறுத்த முடிவு எட்டப்பட்டது.
லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் 2024, அக்டோபரில் இந்திய டிஜிஎம்ஓ ஆக பொறுப்பேற்றாா். அதற்கு முன்பு அவா் சைனாா் காா்ப்ஸ் என்ற ராணுவப் படைப் பிரிவின் ஜெனரல் ஆபீசா் கமாண்டிங் (ஜிசிஓ) எனப்படும் தலைமை கட்டளைத் தளபதியாக இருந்தாா். காஷ்மீா் பள்ளத்தாக்கு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் கிளா்ச்சி எதிா்ப்பு நடவடிக்கைகளை வழிநடத்துவதில் நிபுணத்துவம் பெற்றவராக லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் கருதப்படுகிறாா். இந்திய ராணுவத்தில் 1989-ஆம் ஆண்டு முதல் இவா் பணியாற்றி வருகிறாா்.
