செய்திகள் :

இந்திய விண்வெளியில் புதிய மைல்கல்: திரௌபதி முர்மு!

post image

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான ஆகஸியம்-4 பயணத்தின் ஒரு பகுதியாக, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் நட்சத்திரங்களை நோக்கிய பயணத்தினால் முழு நாடும் உற்சாகமாகவும், பெருமையும் அடைவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கொண்ட குழுவுடன் ஃபால்கான்-9 ராக்கெட் புதன்கிழமை பிற்பகல் 12 மணியளவில் விண்ணில் பாய்ந்தது.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்காகத் தேர்வான வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா உள்பட நான்கு பேர் குழு தேர்வு செய்யப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாடிவன் கென்னடி விண்வெளி மையத்தில் ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான்-9 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

இதுதொடர்பாக திரௌபதி முர்முவின் எக்ஸ் பதிவில்,

கேப்டன் சுபான்ஷு சுக்லா விண்வெளியில் இந்தியாவிற்கு ஒரு புதிய மைல்கல்லை உருவாக்கினார். நட்சத்திரங்களை நோக்கிய இந்தியரின் பயணத்தில் முழு தேசமும் உற்சாகமாகவும், பெருமையாகவும் இருக்கிறது.

குழுவினரால் மேற்கொள்ளப்படும் பரந்த அளவிலான சோதனைகள் அறிவியல் ஆய்வுகள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியின் புதிய எல்லைகளுக்கு வழிவகுக்கும்.

சுபான்ஷு சுக்லாவுடன், அமெரிக்கா, போலந்து, ஹங்கேரியைச் சேர்ந்தவர்கள் ஆக்ஸியம் மிஷனில் பயணிப்பதால் உலகம் ஒரு குடும்பம் என்பதை நிரூபித்துள்ளார்கள்.

நாசாவிற்கும் இஸ்ரோவிற்கும் இடையிலான நீடித்த நாட்டாண்மையைப் பிரதிபலிக்கும் இந்த பணியின் வெற்றிக்கு எனது வாழ்த்துகள் என்று அவர் கூறினார்.

மகாராஷ்டிரத்தில் கரோனாவுக்கு 3 பேர் பலி! புதியதாக 30 பாதிப்புகள் உறுதி!

மகாராஷ்டிர மாநிலத்தில் புதியதாக 30 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தெற்காசிய நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநி... மேலும் பார்க்க

2026 முதல் 10ம் வகுப்புக்கு இரண்டு பொதுத் தேர்வுகள்: சிபிஎஸ்இ

நாடு முழுவதும்2026ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பொதுத் தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ ஒப்புதல் வழங்கியுள்ளதாக தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி அறிவித்துள்... மேலும் பார்க்க

அவசரநிலை 50 ஆண்டுகள் நிறைவு! மத்திய அமைச்சரவை தீர்மானம்!

அவசரநிலை பிரகடனம் செய்து 50 ஆண்டுகள் நிறைவையொட்டி, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.காங்கிரஸ் தலைமையிலான முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரசு, கடந்த 1975 ஆ... மேலும் பார்க்க

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல்நிலை கவலைக்கிடம்!

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளத்தின் முன்னாள் முத... மேலும் பார்க்க

140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையைச் சுமந்து செல்கிறார் சுபான்ஷு சுக்லா!

140 கோடி இந்தியர்களின் விருப்பங்கள், நம்பிக்கைகள் சுமந்து செல்லும் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பல்வேறு இன்னல்களைத் தாண்டி, ஃபால்கன்-9 ரா... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லாவுக்கு மோடி, ராகுல் வாழ்த்து!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.மனிதர்களை விண்ணுக்கு அ... மேலும் பார்க்க