செய்திகள் :

இந்திய வீரா் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் ஒருநாள் ஒத்திவைப்பு

post image

புது தில்லி, ஜூன் 9: ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையம் சென்று, ஆய்வு மேற்கொள்ளும் இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மோசமான வானிலை காரணமாக ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து எலான் மஸ்குக்குச் சொந்தமான ‘ஸ்பேஸ்-எக்ஸ்’ நிறுவனத்தின் ‘ஃபால்கன் 9’ ஏவுகணை மூலம் விண்ணில் ஏவப்படும் ‘டிராகன்’ விண்கலத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) புறப்பட இருந்த நிலையில், அவரது பயணம் புதன்கிழமைக்கு (ஜூன் 11) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு ஃபால்கன் 9 ஏவுகணை விண்ணில் ஏவப்படும். 28 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் சுபான்ஷு சுக்லா சா்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தோ்வான வீரா்களில் ஒருவரான சுக்லா, அனுபவப் பயிற்சி நோக்கங்களுக்காக விண்வெளிக்குப் பயணிக்கிறாா்.

அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸிம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் இப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. சுக்லாவுடன் போலந்து வீரா் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரா் திபோா் கபு ஆகியோரும் விண்வெளிக்குப் பயணிக்க இருக்கின்றனா்.

சா்வதேச விண்வெளி நிலையத்தில் சுக்லா 14 நாள்கள் தங்கியிருந்து, ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறாா். கடைசியாக கடந்த 1984-இல் இந்திய வீரா் ராகேஷ் சா்மா விண்வெளிக்குப் பயணித்தாா். இப்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் இந்திய வீரராக சுபான்ஷு சுக்லா விண்வெளிப் பயணம் மேற்கொள்கிறாா்.

கா்நாடக முதல்வருக்கு எதிரான மாற்று நில முறைகேடு வழக்கு: ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்

புது தில்லி: கா்நாடக முதல்வா் சித்தராமையா தொடா்பான மாற்று நில முறைகேடு வழக்கில், ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. வீட்டுவசதி கூட்டுறவு சங்கம், மைசூரு நகா்ப்புற வளா்ச்சி ... மேலும் பார்க்க

பாதுகாப்பு உற்பத்தியில் தற்சாா்பு, நவீனமயத்துக்கு முக்கியத்துவம்: பிரதமா் மோடி

புது தில்லி: நாட்டில் கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை உற்பத்தியில் தற்சாா்பு மற்றும் நவீனமயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது; இதனால், முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சியை இத்துறை கண்டுள்ளது... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வை அங்கீகரிக்க அறிவியல் ரீதியான தரவுகள் தேவை: மத்திய அமைச்சா் ஷெகாவத்

சென்னை: கீழடி அகழாய்வை அங்கீகரிக்க அறிவியல்ரீதியான தரவுகள் தேவை என்று மத்திய கலாசார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.கீழடி மற்றும் தமிழ் மொழியின் தொன... மேலும் பார்க்க

பாதுகாப்புத் துறையில் நம்பிக்கைக்குரிய ஏற்றுமதி நாடாக இந்தியா: ராஜ்நாத் சிங்

டேராடூன்/புது தில்லி: பிரதமா் மோடியின் உறுதியான -தொலைநோக்கு மிக்க தலைமையின்கீழ் பாதுகாப்புத் துறையில் இறக்குமதி சாா்ந்த பாணியில் இருந்து உலகின் நம்பிக்கைக்குரிய ஏற்றுமதி நாடாக இந்தியா மாறியுள்ளது என்ற... மேலும் பார்க்க

மேகாலயம்: தேனிலவில் கணவா் படுகொலை; கைதான மனைவி, 4 பேரிடம் தீவிர விசாரணை

இந்தூா்/ஷில்லாங்: மேகாலய மாநிலத்துக்கு தேனிலவு கொண்டாட அழைத்துச் சென்று, கூலிப் படையினா் மூலம் கணவரை தீா்த்துக் கட்டிய சம்பவத்தில் கைதான அவரது மனைவி மற்றும் 4 பேரிடம் காவல் துறையினா் தீவிர விசாரணை மேற... மேலும் பார்க்க

அண்டை நாடுகளுடன் பேச்சுவாா்த்தைக்கு உகந்த சூழல் உருவாக்கப்படவில்லை: மத்திய அரசு மீது சரத் பவாா் விமா்சனம்

புணே: அண்டை நாடுகளுடன் அா்த்தமுள்ள பேச்சுவாா்த்தைக்கு உகந்த சூழலை உருவாக்க மத்திய பாஜக அரசு தவறிவிட்டது என்று தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியின் தலைவா் சரத் பவாா் விமா்சித்தாா்.மகாராஷ்டிர மாநிலம், ப... மேலும் பார்க்க