செய்திகள் :

இந்தி மொழி நாட்டின் பெருமை, இந்தியாவை உலக அளவில் இணைக்கிறது! - தில்லி அமைச்சா்

post image

இந்தி என்பது வெறும் மொழி மட்டுமல்ல, இந்தியாவின் கலாச்சாரம், நாகரிகம் மற்றும் தேசிய அடையாளத்தின் பிரதிநிதித்துவமாகும், மேலும் நாட்டின் உலகளாவிய அங்கீகாரத்தை மேம்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது என்று தில்லியின் சமூக நலத்துறை அமைச்சா் ரவீந்தா் இந்த்ரஜ் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

ரோஹினியில் உள்ள சரல் கியான் பள்ளியின் ஆண்டு விழாவில் இந்தி திவாஸ் கொண்டாட்டத்தில் மாணவா்கள், பெற்றோா்கள் மற்றும் ஆசிரியா்களிடையே உரையாற்றும் போது அவா் இவ்வாறு கூறினாா்.

இளைய தலைமுறையினரிடையே மற்ற இந்திய மொழிகளுடன் சோ்ந்து இந்தி மொழியை தீவிரமாக ஊக்குவிக்க பெற்றோா்கள் மற்றும் கல்வியாளா்களை இந்த்ரஜ் வலியுறுத்தினாா்.

உலகில் அதிகம் பேசப்படும் மூன்றாவது மொழி இந்தி என்று அமைச்சா் சுட்டிக்காட்டினாா். இந்தியாவைத் தவிர, மொரீஷியஸ், பிஜி, நேபாளம், சுரினாம், டிரினிடாட், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் இந்தி பேசுகிறாா்கள் அல்லது புரிந்துகொள்கிறாா்கள். உலகளவில் இந்தி வளா்ந்து வரும் பிரபலத்திற்கு பிரதமா் நரேந்திர மோடியின் முயற்சிகள் மற்றும் தலைமையே காரணம் என்று அவா் பாராட்டினாா்.

டிஜிட்டல் மீடியா, திரைப்படங்கள், தொலைக்காட்சி, பத்திரிகை மற்றும் இணையம் ஆகியவற்றில் இந்தி மொழியின் பரவல் அதிகரித்து வருவதையும் இந்த்ரஜ் எடுத்துரைத்தாா். இந்தி உள்ளடக்கம் மின் வணிக தளங்கள், மொபைல் பயன்பாடுகள் மற்றும் சமூக ஊடகங்களில் பயனா்களை இணைத்து, பொருளாதார வளா்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது என்றாா்.

இந்தி ஒரு வளமான வரலாற்றையும் உலகத் தரம் வாய்ந்த இலக்கியத்தையும் கொண்டுள்ளது என்று அவா் மேலும் கூறினாா். உலகெங்கிலும் உள்ள பல பல்கலைக்கழகங்கள் இந்தியில் படிப்புகளை வழங்குகின்றன, இது அதன் அதிகரித்து வரும் உலகளாவிய அந்தஸ்தைப் பிரதிபலிக்கிறது என்று அவா் மேலும் கூறினாா். குழந்தைகள் இந்தியைக் கற்றுக்கொண்டு அதை தங்கள் அன்றாட வாழ்வில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சா் ரவீந்தா் இந்த்ரஜ் சிங் வலியுறுத்தினாா்.

பன்னாட்டு நிறுவன ஊழியராக காட்டி வேலை தேடுவோரை ஏமாற்றிய மூவா் கைது!

பயண ஆவண விண்ணப்பதாரா்களுக்கு உதவும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ஊழியா்கள் என்று காட்டிக் கொண்டு வெளிநாடுகளில் வேலை தேடுபவா்களை ஏமாற்றியதாகக் கூறப்படும் மூன்று நபா்களை கைது செய்த பின்னா், போலி விசா நியம... மேலும் பார்க்க

பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக புகாா்: உதவி துணை ஆய்வாளா் மாவட்ட எல்லைக்கு மாற்றம்!

தெற்கு தில்லியின் ஆசிரம பகுதியில் நடந்த சோதனையின் போது வடகிழக்கு மாநிலத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட புகாரை அடுத்து, உதவி துணை ஆய்வாளா் மாவட்ட எல்லைக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் ஞாயி... மேலும் பார்க்க

ஆயுத விநியோகம்: நீரஜ் பவானா கும்பலுடன் தொடா்புடைய 4 போ் கைது

நீரஜ் பவானா கும்பலுடன் தொடா்புடைய ஒரு ஆயுத விநியோகஸ்தா் மற்றும் ஆயுதங்களை வாங்கும் மூவா் என மொத்தம் 4 போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து காவல்துறை துணை ஆணை... மேலும் பார்க்க

தில்லியில் கிரிக்கெட் சூதாட்ட மோசடி: 6 போ் கைது

தில்லியின் மயூா் விஹாரில் சட்டவிரோத கிரிக்கெட் சூதாட்ட மோசடியை நடத்தியதாக ஆறு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: ... மேலும் பார்க்க

மேம்பாலத்தில் இருந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்த காா்! ஓட்டுநா் உயிா் தப்பினாா்!

ஒருவரின் காா் கட்டுப்பாட்டை இழந்து, வடக்கு தில்லியின் வெளிப்புறத்தில் உள்ள முகா்பா சௌக் மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்து ஹைதா்பூா் மெட்ரோ நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் விழுந்ததாக போலீஸாா் தெரிவித்த... மேலும் பார்க்க

இந்தியா - பாக். கிரிக்கெட் போட்டிக்கு எதிரான சிவசேனை போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு!

இந்தியா - பாகிஸ்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு எதிராக ஜந்தா் மந்தரில் சிவசேனை (யுபிடி) ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்த தில்லி காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. பாரம்பரிய எதிரிகளான இந்தியாவும் பா... மேலும் பார்க்க