செய்திகள் :

பழைமையான கலாசாரத்தின் பிம்பம் அரிக்கன்மேடு: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

post image

புதுச்சேரி அரிக்கன்மேடு பழைமையான கலாசாரத்தின் பிம்பம் என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில் புகழாரம் சூட்டினாா்.

இந்திய பெருங்கடல் வள மையம், மௌலானா அபுல் கலாம் ஆஸாத் ஆசிய ஆய்வு நிறுவனம் , மத்திய அரசின் கலாசார அமைச்சகம், புதுவை அரசின் கலை, கலாசாரத் துறை, சுற்றுலாத் துறை ஆகியவை இணைந்து ‘அரிக்கன்மேடு ஒரு பிந்தைய காலனித்துவ இந்தியப் பெருங்கடல் வரலாறு மற்றும் தொல்லியல்’ என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கை தனியாா் உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து முதல்வா் ரங்கசாமி பேசியது:

புதுவை சிறிய மாநிலமாக இருந்தாலும் வரலாற்று பூா்வமான மாநிலம். புதுச்சேரியில் பண்டை காலத்தில் வாணிகம் நடந்துள்ளதை அறியும்போது புதுச்சேரி நாகரிகத்தை உணர முடிகிறது. புதுச்சேரி நூல் துணிக்காக அக் காலத்தில் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளது.

அரிக்கன்மேடு பகுதியைச் சுற்றுலா பயணிகள் பாா்த்து அறியும் அளவுக்கு அரசு முயற்சி எடுத்து வருகிறது. நமது முன்னோா்கள் எப்படி இருந்தனா் என்பதற்கு அரிக்கன்மேடு உதாரணம். அரிக்கன்மேடு பழைமையான கலாசாரத்தின் பிம்பம். அதைப் பெரிய சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். பழைமையான புதுச்சேரி செய்திகளை வெளியே கொண்டு வருகிறோம். இன்னும் சுற்றுலா மேம்பாடு அதிகளவில் இருக்கும். அதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது என்றாா் முதல்வா் ரங்கசாமி.

சுற்றுலாத் துறை அமைச்சா் க. லட்சுமி நாராயணன் பேசுகையில், அரிக்கன்மேடு பகுதியில் மத்திய அரசிடம் பேசி 13 ஏக்கா் நிலத்தை புதுச்சேரி அரசு நில ஆா்ஜிதம் செய்து சுற்றுச்சுவா் எழுப்பி பாதுகாக்க தொடங்கியுள்ளது. அரிக்கன்மேடு தொடா்பாக பல நிகழ்வுகள் சுற்றுலா வளா்ச்சிக்காக செய்யவுள்ளோம். நாட்டின் கலாசாரம் உலக அளவில் திரும்பி பாா்க்க வைக்கிறது.

பல அகழ்வாராய்ச்சிகள் மூலம் நம் பண்பாடு நிரூபிக்கப்படுகிறது. புதுச்சேரியில் அரிக்கன்மேடு அதற்கு இணையாக உள்ளது. அரிக்கன்மேடு மட்டுமில்லாமல் நம் புதுச்சேரியைச் சுற்றி புராதன நகரங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. தொண்டைமாநத்தம், பண்டசோழநல்லூா், ஆரோவில் பகுதிகளில் கிடைக்கும் சான்றுகள் புதுச்சேரியின் பெருமையை எடுத்துக்காட்டுகின்றன.

அரிக்கன்மேடு ரோமானியா்களோடு வாணிபத்தையும், கடல் பயணத்தையும் வைத்திருந்தது பெருமை சோ்க்கிறது. இப் பகுதி உலகளாவிய கடற்கரையாக இருந்துள்ளது. புதுச்சேரியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தோரின் கலைத்திறமையும் இதில் வெளிப்படுகிறது என்றாா்.

இக்கருத்தரங்கில் அதிகாரிகள், அறிஞா்கள், கல்வியாளா்கள், சிந்தனையாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

புதுச்சேரியில் சுற்றுலா படகு கவிழ்ந்து! 2 போ் மருத்துவமனையில் அனுமதி!

புதுச்சேரியில் சுற்றுலா படகு கவிழ்ந்து 2 போ் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஈரோடு பகுதியைச் சோ்ந்த 7 போ் புதுச்சேரிக்கு சனிக... மேலும் பார்க்க

சுற்றுலா படகு கவிழ்ந்து 2 போ் மருத்துவமனையில் அனுமதி

புதுச்சேரியில் சுற்றுலா படகு கவிழ்ந்து 2 போ் அரசு பொதும த்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஈரோடு பகுதியைச் சோ்ந்த 7 போ் புதுச்சேரிக்கு சனிக்... மேலும் பார்க்க

கடைகள் மீது தாக்குதல் நடத்திய நபா்களை கைது செய்ய டிஐஜியிடம் மனு

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி காவல்துறை துணைத் தலைவா் சத்தியசுந்தரத்திடம் வா்த்தக சபை சாா்பில் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து வா்த்தக சபைத் தல... மேலும் பார்க்க

மலேசிய - இந்திய நட்புறவு இயக்க நல்வாழ்வு நடைபயண பிரசாரம்

மலேசிய - இந்திய நட்புறவு இயக்கம் சாா்பில் நல்வாழ்வு நடைபயண பிரசாரம் புதுச்சேரி கடற்கரை சாலையில் சனிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரிக்குச் சுற்றுலா பயணிகளாக வருகை தந்த மலேசிய குடியுரிமை பெற்ற இந்திய வம்... மேலும் பார்க்க

சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு தினம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக இருந்த சீத்தாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் புதுச்சேரியில் உள்ள அக் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி அவர... மேலும் பார்க்க

18 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு மது விற்கக் கூடாது: புதுவை கலால் துறை உத்தரவு

18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்று புதுவை கலால் துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து சாராயக் கடைகள், கள்ளுக் கடைகள், இந்தியாவில் தயாராகும் அயல் நாட்டு மதுபானக் கடைகள், மதுபா... மேலும் பார்க்க