செய்திகள் :

இந்த நகரத்தில் ”இறப்பதே சட்டவிரோதம்” - வினோத விதிக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?

post image

ஸ்பெயினின் கிரனாடா மாகாணத்தில் உள்ள லஞ்சரோன் என்ற சிறிய நகரத்தில், 1999ஆம் ஆண்டு முதல் மரணிப்பது "சட்டவிரோதம்" என்ற வினோதமான விதி அமலில் உள்ளது.

அப்போதைய மேயர் ஜோஸ் ரூபியோ, நகரின் மயானத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால், இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.

இந்த விதி அந்த நகரத்தின் மயானத்தில் அடக்கம் செய்வதற்கு இடமில்லாததால், புதிய மயானத்திற்கு நிலம் தேடுவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு குடியிருப்பாளர்களை வலியுறுத்துவதற்காக வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.

Granada

26 ஆண்டுகள் கடந்த பின்பும், லஞ்சரோனில் இன்னும் ஒரே ஒரு மயானம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மயான பிரச்சினை தீர்க்கப்பட்டதா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், இந்த வினோத விதி உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது.

4,000 மக்கள் வசிக்கும் இந்த நகரின் பொருளாதாரம், நீர் தொழில், விவசாயம் மற்றும் சுற்றுலாவை அடிப்படையாகக் கொண்டுள்ளது. பாதாம், ஒலிவ், திராட்சை ஆகியவை இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. உள்ளூர் ஒயின்கள் மற்றும் பன்றி இறைச்சி இங்கு பிரதான உணவுகளாக உள்ளன.

உலகில் வேறு எங்கும் மரண தடை?

லஞ்சரோன் மட்டுமல்ல, நார்வேயின் லாங்யியர்பியென் நகரமும் 1950 முதல் இதேபோன்ற மரண தடையை விதித்துள்ளது. அங்கு, ஆர்க்டிக் காலநிலையில் புதைக்கப்பட்ட உடல்கள் அழிவடையாமல் இருப்பது கண்டறியப்பட்டது.

உயிருள்ள மாதிரிகள் புதைக்கப்பட்ட உடல்களில் இருந்து எடுக்கப்பட்டன. இது நோய் பரவலை ஏற்படுத்தும் என்று அங்கும் அடக்கங்கள் தடை செய்யப்பட்டன.

லஞ்சரோனின் இந்த "மரண தடை" விதி, வினோதமாக இருந்தாலும், உலகளவில் இந்நகரத்திற்கு தனித்துவமான அடையாளத்தை அளித்துள்ளது.

சுற்றுலா, மசாஜ் பார்லர்கள் இல்லை... தாய்லாந்தின் மிகப்பெரிய வருவாய் பற்றி தெரியுமா?

தாய்லாந்து சுற்றுலா தலங்களுக்கு பெயர்பெற்ற நாடாகும். நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலா துறை முக்கிய பங்குவகித்தாலும் விவசாயம் மற்றும் ஏற்றுமதி தான் அதிக வருமானம் தரும் ஆதராமாக உள்ளது என்பது பற்றி பலரு... மேலும் பார்க்க

பாங்காங் ஏரியின் நிறங்கள்! - சிலிர்க்க வைத்த காட்சி |திசையெலாம் பனி- 9

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

குற்றாலம்: ஐந்தருவி மலர் கண்காட்சி; அசரவைத்த காய்கறி குரங்கு, `வாசனைப் பொருள்' வண்ணத்துப்பூச்சி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது மழைக்கால சீசனை முன்னிட்டு சாரல் திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. குற்றாலத்தில் சீசன் சமயங்களில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க சாரல் திருவிழா நடைப... மேலும் பார்க்க

Ooty: ஊட்டிக்கு சுற்றுலா போறீங்களா? எமரால்டு ஏரியை மறந்துடாதீங்க.. சூப்பர் பட்ஜெட் ஸ்பாட்!

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊட்டி இயற்கை அழகு மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு பெயர் பெற்ற ஒரு மலைவாசஸ்தலமாகும். இங்கு ஒரு சூப்பர் ஸ்பாட் பற்றி தான் சொல்லப்போகிறோம்.எமரால்டு ஏரி இந்த ஏரி, எமரால்டு க... மேலும் பார்க்க

வெறும் 100 ரூபாய்க்கு பிரான்ஸில் வீடு விற்பனை; அரசின் இந்த திட்டத்தில் எப்படி வீடு வாங்கலாம்?

பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அம்பர்ட் நகரத்தில் மக்கள் தொகை குறைந்து வருவதால், அதனை மீட்டெடுக்கும் முயற்சியாக, வெறும் ஒரு யூரோவுக்கு (தோராயமாக 100 ரூபாய்) வீடுகளை விற்பனை செய்யும் தனித்... மேலும் பார்க்க

சதுரகிரி: `கொள்ளை அழகு!' - மிஸ் பண்ணவேகூடாத வழித்தடம் | Photo Album

இயற்கை எழில்மிகு சதுரகிரி மலைஇயற்கை எழில்மிகு சதுரகிரி மலைஇயற்கை எழில்மிகு சதுரகிரி மலைஇயற்கை எழில்மிகு சதுரகிரி மலைஇயற்கை எழில்மிகு சதுரகிரி மலைஇயற்கை எழில்மிகு சதுரகிரி மலைஇயற்கை எழில்மிகு சதுரகிரி ... மேலும் பார்க்க