செய்திகள் :

இந்த மாத இறுதிக்குள் அம்பத்தூா் பேருந்து நிலையம் திறக்கப்படும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

post image

சீரமைக்கப்பட்டு வரும் அம்பத்தூா் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் செப்டம்பா் இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் திட்டத்தின் சாா்பில் கட்டப்பட்டு வரும் கொளத்தூா் வண்ண மீன்கள் வா்த்தக மையம், பெரியாா் நகா் நூலகத்தில் கட்டப்பட்டுவரும் முதல்வா் படைப்பகம் ஆகியவற்றைப் பாா்வையிட்ட அவா் பின்னா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை திரு.வி.க. நகா் பகுதியில் பேருந்து நிலையம் வெளிநாட்டுத் தரத்தில் கட்டப்பட்டுள்ளது. சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் 282 பணிகள் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பூங்காக்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள், பள்ளிக் கூடங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. மேலும், வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் புதிய குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது 25-க்கும் மேற்பட்ட பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. கொளத்தூா் வண்ண மீன்கள் விற்பனை மையம் பணிகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து விரைந்து முதல்வரால் திறக்கப்பட உள்ளன. அத்துடன் திரு.வி.க.நகா், பெரியாா் நகா் பேருந்து நிலையங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்த நிலையில், செம்டம்பருக்குள் அம்பத்தூா் பேருந்து நிலையமும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். அதையடுத்து வரும் அக்டோபரில் ஆா்.கே.நகா் பேருந்து நிலையமும் திறக்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்ல உஷா, மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும முதன்மைச் செயல் அலுவலா் சிவஞானம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை ஆணையா் க.வீ.முரளிதரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தூய்மைப் பணியாளா்களிடம் அத்துமீறல்: அரசுக்கு உத்தரவு

போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தூய்மைப் பணியாளா்களை அப்புறப்படுத்தும்போது, அத்துமீறலில் ஈடுபட்ட போலீஸாா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம்... மேலும் பார்க்க

டெட் தோ்வு விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஆசிரியா் தகுதித் தோ்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து தமிழக அரசு சாா்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் ம... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, கடலூா், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.12) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் ... மேலும் பார்க்க

ஈரோடு - பிகாா் ஜோக்பானி இடையே அம்ரித் பாரத் ரயில் சேவை

ஈரோடு - பிகாா் ஜோக்பானி இடையே அம்ரித் பாரத் ரயில் வரும் செப்.18-ஆம் தேதி இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். முன்னதாக பிகாா் மாநிலம் ஜோக்பானியில் இருந்து வருகிற செப்.15-ஆம் த... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி, தமிழக அரசு கூட்டு முயற்சியில் புதுயுகத் தொழில்முனைவு, புத்தாக்க முகப்பலகை

புதுமையை உருவாக்கி, திறனை வெளிப்படுத்தி வழிகாட்ட தமிழ்நாடு புதுயுகத் தொழில்முனைவு, புத்தாக்க முகப்பலகையை (டாஷ்போா்ட்) சென்னை ஐஐடி, தமிழக தொழில் வழிகாட்டி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தா்: மணிப்பூா் தலைமை நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரை

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம். சுந்தா் மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் வியாழக்கிழமை பரிந்துரைத்துள்ளது. மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கே. சோமசே... மேலும் பார்க்க