செய்திகள் :

இனி அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட் ரூ.200 மட்டுமே! ஆனால் இங்கில்லை..

post image

கர்நாடகத்தில் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் குறித்து பொதுமக்களிடம் அம்மாநில அரசு கருத்துக்கேட்பு நடத்தப்படவுள்ளது.

வாரம் முழுவதும் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கும் சாமானியர்களுக்கு வார இறுதி நாள்களில் புத்துணர்ச்சி தருவதில் சினிமாவும் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், திரையரங்குகளில் படத்துக்கான டிக்கெட் விலை நாளுக்கேற்றவாறு மாறுவது மட்டுமல்லாமல், சில திரையரங்குகளில் அதிக விலையும் நிர்ணயிப்பது சினிமா ரசிகர்களுக்கு பெருந்துயரை அளித்து வருகிறது.

இந்த நிலையில், கர்நாடகத்தில் அனைத்து வகையான திரையரங்குகளிலும் ஒரே மாதிரியான டிக்கெட் விலையை நிர்ணயம் செய்ய அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட்டுள்ள கர்நாடக அரசு, இதன் மீது 15 நாள்களில் பொதுமக்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பணிபுரிவதால், பெங்களூரில் பல மொழித் திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன.

ஆனால், திரையரங்குகளில் டிக்கெட்டின் கட்டணம் வார நாள்களில் ஒரு விலையிலும், வார இறுதியில் ஒரு விலையிலும், புதிய படங்கள் வெளியீட்டின்போது ஒரு விலையிலும் நிர்ணயிக்கின்றனர். இதனால், சினிமா ரசிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாய்த் தெரிகிறது. ஐமேக்ஸ் உள்ளிட்ட திரையரங்குகளில் ஒரு படத்துக்கு ரூ.600 முதல் ரூ.1000 வரையில் டிக்கெட் விலை நிர்ணயிக்கின்றனர்.

இந்த நிலையில்தான், கர்நாடகத்தில் அனைத்து மொழிப் படங்களுக்கான மல்டிபிளக்ஸ் உள்ளிட்ட அனைத்து விதமான திரையரங்குகளிலும், பொழுதுபோக்கு வரி உள்பட அனைத்தும் சேர்த்து ரூ.200-க்குள் தான் கட்டணம் வசூலிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் கருத்துக்கேட்புக்குப் பிறகு, அனைத்து தரப்பு கருத்துகளையும் ஆராய்ந்து, அதனை கர்நாடக அரசு சட்டமாகக் கொண்டு வரும்.

Movie ticket prices will not go above ₹200 in Karnataka anymore

தலைமைத் தேர்தல் ஆணையருடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு!

தில்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை திமுக எம்.பி.க்கள் இன்று(வியாழக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளனர். தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து வாக்காளர் பட்... மேலும் பார்க்க

ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாதப் பூஜைக்காக இன்று (வியாழக்கிழமை) முதல் ஜூலை 21 வரை 5 நாள்கள் கோயிலின் நடை திறந்திருக்கும். கேரளத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாள்கள் கோ... மேலும் பார்க்க

அன்று நீட் தோல்வி.. இன்று ரோல்ஸ் ராய்ஸியில் ரூ.72 லட்சத்தில் வேலை! 20 வயதில் சாதித்த பெண்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதே ஆன ரிதுபர்னா என்ற பொறியியல் மாணவி, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72 லட்சத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.எந்தத் தோல்வியும் முடிவல்ல, வாய்ப்புகள் கொட்டிக்கிட... மேலும் பார்க்க

ம.பி.யில் வீட்டின் சுவர் இடிந்ததில் குழந்தை பலி, தந்தை காயம்!

மத்தியப் பிரதேசத்தின் கனமழை காரணமாக கட்டுமானத்தில் உள்ள வீடு இடிந்து விழுந்ததில் 2 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் தார் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை பெய... மேலும் பார்க்க

சேர்ந்து வாழச் சொல்வதா? 16 ஆண்டு கால விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு!

புது தில்லி: 16 ஆண்டு காலமாக நடந்து வரும் விவாகரத்து வழக்கில், மணமுறிவு கோரும் தம்பதியை சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்தினால் மனவேதனைதான் ஏற்படும் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.கணவர... மேலும் பார்க்க

ரயில்களில் முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்குவதில் கட்டுப்பாடு!

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட் வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.மற்ற போக்குவரத்தை காட்டிலும் ரயிலில் கட்டணக் குறைவு என்பதால், பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்... மேலும் பார்க்க